<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9835118</id><updated>2011-07-07T14:08:25.182-12:00</updated><category term='ஆதங்கம்'/><category term='சிறுகதை'/><category term='கவிதைகள்'/><category term='செய்திகள்'/><title type='text'>"விழி"</title><subtitle type='html'>&lt;img src="http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif"&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-6874187974745215975</id><published>2007-04-23T20:04:00.000-12:00</published><updated>2007-04-23T20:06:44.881-12:00</updated><title type='text'>சிறிலங்கா கூட்டுப் படைத் தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு அழிப்பு-</title><content type='html'>யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டது. 6 சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.


யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட போது பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும், தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியதாவது:

பலாலி வான்படைத்தளம் மற்றும் இராணுவக் களஞ்சியம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக எமது தளத்துக்குத் திரும்பியுள்ளனர்.

இதில் சிறிலங்கா இராணுவத்துக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த வானூர்தியில் இருந்த எமது வானோடி ஒருவரை தொடர்பு கொண்டபோது பலாலித் தளம் தீப்பற்றி எரிந்தததை தாம் பார்த்ததாகக் கூறினார்.

இத்தாக்குதல் தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பான ஊடக மையத்தின் பேச்சாளர் கூறியதாவது:

எமது இராணுவத்தினர் இலகு ரக வானூர்தி ஒன்றைப் பார்த்துள்ளனர். அது பருத்தித்துறையிலிருந்து பலாலி நோக்கி வந்துள்ளது. எமது படையினர் 50 கலிபர் துப்பாக்கிகள் மூலம் அந்த வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்திய போதும், அவர்கள் இராணுவ பதுங்கு குழிகள் மீது 2 குண்டுகளை வீசிச் சென்றனர். இத்தாக்குதலில் 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்றார்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தனது இணையத் தளத்தில் பதிவு செய்துள்ள செய்தி:

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்தி உள்நுழைய முயன்றது. அதனை இராணுவத்தினர் முறியடித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்து அந்த வானூர்திகள், பலாலிக்கு வந்தன. பாதுகாப்பு எச்சரிக்கை சாதனங்கள் உடனே இயக்கப்பட்டன. தாக்குதல் வானூர்திகளை நோக்கி வானூர்தி எதிர்ப்பு தளபாடங்கள் நிறுத்தப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல் ஏதும் நடத்தாமல் தாக்குதல் வானூர்தி திரும்பியுள்ளது.

இருப்பினும் திரும்பிச் செல்லுகையில் மயிலிட்டி கடற்பரப்பில் வெடிபொருட்களை வீசிச் சென்றுள்ளனர்.

இதனிடையே பூநகரியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 6 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம், முதன்மை இராணுவ மருத்துவமனை, கவசப்படைப்பிரிவு மையம், உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும்.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக் கூறிக் கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர். 

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில்  தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன.

தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் இன்று குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர்.

தமிழீழ வான்படையினரின் இன்றைய தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காப் படையினர், தமது முன்னரங்க நிலைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிக் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.


http://www.eelampage.com/?cn=31525&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-6874187974745215975?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/6874187974745215975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=6874187974745215975' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/6874187974745215975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/6874187974745215975'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2007/04/blog-post.html' title='சிறிலங்கா கூட்டுப் படைத் தளம் மீது வான்புலிகள் அதிரடித் தாக்குதல்: ஆயுதக் கிடங்கு அழிப்பு-'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-113545564730754077</id><published>2005-12-24T20:19:00.000-12:00</published><updated>2006-05-04T10:33:35.203-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!</title><content type='html'>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!! 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு சென் மேரீஸ் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது.



நன்றி: புதினம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-113545564730754077?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/113545564730754077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=113545564730754077' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/113545564730754077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/113545564730754077'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/12/blog-post_24.html' title='நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-112497016050265513</id><published>2005-08-24T23:26:00.000-12:00</published><updated>2006-03-10T09:56:02.120-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதங்கம்'/><title type='text'>திரைகளில் பெண்கள் இன்னும் பண்டமாய்!</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;இந்த நூற்றாண்டில் ஊடகம் என்றவகையில் இணையம், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றோடு மக்களை அதிகமாக சென்றடைகின்ற இன்னொரு முக்கியமான ஊடகம் சினிமா. &lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;சின்னத்திரையும் சரி வெள்ளித்திரையும் சரி நிறையவே மக்களிடை ஆதிக்கம் செய்கின்றது. கிராமங்களில் கூட சினிமா திரையரங்குகள் இருக்கின்றன.  

ஏன் இன்னும் சொல்லப்போனால் பல தொலைக்காட்சிகளும், வானொலிகளும் இந்த வெள்ளித்திரையில் அதாவது சினிமாவில் தங்கியிருக்கிறது. காமொடியாக, பாட்டாக , காட்டியாக பற்பல நிகழ்ச்சிகளை இந்த திரைப்படங்களை வைத்தே தாயாரித்து தங்கள் காலத்தை போக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. அதே போல தான் சின்னத்திரையும் நாடகம் போடதா ஒரு தொலைக்காட்சி நம்மவர்களிடையே தாக்குப்பிடிக்குமா என்றால் யோசிக்க வேண்டியவிடயம்.&lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;இப்படி மக்களை பலவகையில் சென்றடைகின்ற ஊடகமான இந்த சினிமா பலர் பெண்களை நோக்கும் விதம்  இன்னும் மாறுபடவில்லை?  பல திரைப்படங்களில் பெண்கள் பற்றிய பழமையான கருத்தையே இன்னும் காணமுடிகிறது. கவர்ச்சிக்காக பெண்களைப்பயன்படுத்துவதும். பெண்களை பண்டமாக பார்ப்பதும் இன்னும் நின்றுவிடவில்லை. தமிழ்ச்சினிமாவைப் பொறுத்தவரை கதாநாயகனை மையமாக கொண்டு அவரது உதவியால் தனது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்கிறது போல தான் அனேக படங்கள் வெளிவருகின்றன. பெண்ளை மையமாக வைத்து அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்ற மாதிரி படங்கள் வரவில்லை என்று சொல்லவில்லை அப்படி வந்திருந்தாலும் குறைவு தான். 

அழகுக்காக ஒரு ஈர்ப்பிற்காக தான் அநேக படங்களில் பெண் நாயகிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. அதைப்போன்று தான் பாடங்களில் வருகின்ற காட்சிகளில் நாயகர்கள் சாதாரனமாக ஆடை அணிந்திருப்பார்கள். நாயகிகள் மட்டும் சில படங்களில் அரைகுறையாய் கவர்ச்சியாய் அணிந்திருப்பார்கள். இந்த நிலை ஏன் இன்னும்? &lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;அண்மையில் ஒருபடம் பார்க்ககிடைத்தது. அதில் நாயகனும் அவனது சகோதரனும் நாயகியைக்காதலிப்பார்கள். நாயகன் சகோதரனுக்காய் நாயகியை விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுக்கிறது பெரிய விடையமே இல்லைங்க. பாராட்டலாம் ஆனால், விட்டுக்கொடுப்பு அந்த பெண்ணின் சம்மதத்தோட நடக்கிறதா? என்றால் இல்லை. அவர் நினைச்சார் செய்யிறார். இதை விடக்கொடுமை என்ன என்றால் &lt;strong&gt;"நீ அவளை எடுத்துக்கோ"&lt;/strong&gt; என்கிறார் நாயகன். பலமுறை இந்த சொற்றொடர் பாவிக்கப்பட்டது. பரிதாபமாக இருந்தது படத்தை பாக்க. பல படங்களில் இப்படிப்பட்ட வார்த்தைப்பிரயோகம் பெண்ணை நோக்கிப்பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் என்ன பண்டமா?? எடுத்துக்கோ வைச்சுக்கோ என்று கையைக்காட்டுவதற்கு?  இப்படிப்பல படங்களில் இந்த வசனம் பார்க்ககூடியதாக இருந்தது, இருக்கிறது. அது நிற்க. &lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பல சந்தர்ப்பங்களில். ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது திருமணம் தான் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் திடிரென ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசிய கலியாணம் தடைப்பட்டுவிட்டால் பெண்ணின் தகப்பனார் செய்கின்ற முதல் வேலை. மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து என் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுங்கள். வாழ்க்கையை சீரழிச்சிடாதீங்க என்று புலம்பிற காட்சிகள் பல? ஏனைய்யா இந்த நிலமை? வாழ்க்கை என்றது திருமணமா? திருமணம் நடக்கவில்லை என்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிஞ்சிதா? ஏன் இப்படியான ஒரு மாயையினை அனேக காட்சிகளில் உருவாக்குகிறார்கள். &lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;
&lt;span style="font-size:78%;"&gt;இந்த படங்களில் வருகின்ற இன்னொரு விடயம் என்னவென்றால். நாயகன் அல்லது நாயகியை சார்ந்தவர்கள் அது தாயாக கூட இருக்கலாம் சொல்றது. "பொம்பளைமாதிரி அடக்க ஒடுக்கமாய் இரு"? அதென்னங்க பொம்பளை மாதிரி? புரியவே இல்லை. ஒரு படத்தில ஒரு றவுடி கலாட்டா செய்கிறார். அதால ஒரு சின்னப்பிள்ளை பாதிக்கப்படுறார். இதைப்பாத்த நாயகி கோவம் கொண்டு அந்த றவுடியை பேசிறாங்க. பொலிஸ் வர நாயகன் நாயகியையும் அழைத்துக்கொண்டு விலகிறார். அந்த அம்மா நடந்ததை பொலிஸிற்கு சொல்ல முற்படுறாங்க ஆனா அந்த நாயகன் விடல. அவர் சொல்றார். "பொம்பளை மாதிரி அடக்கி வாசி" என்ற தொனில அவங்களை பேசிறார்.? ஏன் இப்படிப்படைக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு பெண் நியாயத்தை கேட்கக்கூடாதா? ஏன் இப்படி பொம்பளை மாதிரியிரு. அடக்கி வாசி என்ற இந்த பதத்தை பாவிச்சு இன்னும் பிற்போக்கு வாதம் பேசி. பெண்களை முடக்கணும் என்று நினைக்கிறார்கள் என்பது வேதனையான விடயம். அப்படிப்பட்ட வசன நடைகளை கேட்டுவிட்டு  இருக்க  முடியல. இது ஒரு சில படங்களில் கண்டது தான். ஆனா இப்படி பல படங்களில் நடக்கிறது. பெண்கள் முன்னோக்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற, பல வளர்ச்சியைக்கண்டு விட்ட  இந்த காலத்தில ஏன் இப்படியான காட்சிகள் அமைக்கப்படுகின்றன? புரியவில்லை. என்று தான் இந்த எடுத்துக்கோ வைச்சுக்கோ என்ற நிலை மாறுமோ? எதிர்பார்த்தவண்ணம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-112497016050265513?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/112497016050265513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=112497016050265513' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112497016050265513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112497016050265513'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/08/blog-post.html' title='திரைகளில் பெண்கள் இன்னும் பண்டமாய்!'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-112422544193906310</id><published>2005-08-16T08:48:00.000-12:00</published><updated>2005-08-16T08:50:41.946-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>Operation AMERICAN HIROSHIMA (ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா)</title><content type='html'>அல்கெய்டாவின் அடுத்த இலக்கு?? ரிசியின் புலனாய்வு அரசியல்.

&lt;a href="http://www.tamilnaatham.com/audio/rishie/20050812.smil"&gt;http://www.tamilnaatham.com/audio/rishie/20050812.smil&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-112422544193906310?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/112422544193906310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=112422544193906310' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112422544193906310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112422544193906310'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/08/operation-american-hiroshima.html' title='Operation AMERICAN HIROSHIMA (ஒப்பிரேசன் அமெரிக்கன் ஹிரோசிமா)'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-112203054501205532</id><published>2005-07-21T23:07:00.000-12:00</published><updated>2007-02-10T23:51:57.421-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஒன்பதாவது முடிச்சு!</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;"என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல"
ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. &lt;/span&gt;
&lt;p&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள்.இத்தனைக்கும் யாழ்நகரில் எங்கையே ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இப்படி வாழும் ஒரு தமிழ்ப்பெண். பிறப்பில் கூட அவளிற்கு சோதனை தான். தாயையும் வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டையும் கொண்டு அவள் வெளியில் வந்தாள் என்று அடிக்கடி பேசுவார்களாம். ஆனந்தி பிறந்த போது வீட்டில் நின்ற பசுமாடும் பிரசவத்தில் தாயும் இறந்து போய்விட. &lt;strong&gt;"அவளிறக்கு தாயை விழுங்கியவள்"&lt;/strong&gt; என்ற பட்டப்பெயர் கூடவே வந்து சேந்து விட்டது. சற்று வித்தியாசமானவளாக பார்க்கப்பட்டாள். தந்தைக்கு மனைவியாய் வீட்டிற்கு சித்திவர அவளது நிலை இன்னும் பாரதூரமானது. வெளியுலகம் வெறுமையாய் அவளிற்கு. வெளியிலே செல்ல தடை பாதி என்றால், போக்கிடம் தெரியாமல் வீட்டினிலே அடைபட்டது பாதி. காலங்கள் காத்திருக்கவில்லை பருவவயதை அடைந்து விட்டாள். &lt;strong&gt;"எவனை முழுங்க இவள் பெரிசானாளோ"&lt;/strong&gt; தந்தையின் காதுப்பட சித்தி குத்திச்சென்றாள், தந்தை சித்திதாசனாய்.
தான் அப்படிப்பட்டவளா? அதிஸ்டம் இல்லாதவளா? என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்ள தவித்தாள். தனிமையில் எங்கோ ஒரு மூலையில் தவித்திட்டிருந்தவளை மச்சான் சீலன் ஆற்றினான். பருவமடைந்த புதிசு வேறை சீலனை கவர்ந்திழுத்திருக்கிறாள், இருவரும் காதல் கொண்டனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஆநாதரவாய் இருந்தவளிற்கு ஓரே ஒரு ஆதரவு சீலன் தான்.
சீலன் வேறு யாரும் அல்ல ஆனந்தியின் தாய் மாமன் மகன். சீலன் வீட்டில் கரையேற வேண்டிய இரண்டு பெண்கள் கரையேற்ற அவன் விலைமாடாய் நின்றான். அவனிற்கு அத்தனை விலை கொடுத்து ஆனந்திக்கு கணவனாக்க. ஆனந்திவீட்டில் வசதியும் இருக்கவில்லை மனமும் இருக்கவில்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;p&gt;
இளமை செய்த வேகம் ஒரு நாள் இருவரும் ஓடிச்சென்று விட்டார்கள். அதன் பின்ன அவளிற்கு &lt;strong&gt;"ஓடுகாலி"&lt;/strong&gt; ஆனந்தி என்ற பெயர் தான் பிரபல்யமானது. இருவரது வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்ட புது ஜோடிகள். அருகிலேயே சீலனின் நண்பன் வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்தனர். கூலித்தொழில் தான் சீலன் செய்தான். அவள் சந்தோசமாய் வாழ்ந்தாள். குத்தல் இல்லை, நொட்டை இல்லை, சுதந்திரமாய் கால்வயிறு கஞ்சி கிடைச்சால் போதும் என்பது அவள் நிலை. காலம் கரைந்தோடியது, ஆனந்தி ஒரு குழந்தைக்கு தாயானாள் அவளது 19 தாவது வயசில். சீலன் வீட்டார் வலிய வந்து ஒட்டிக்கொண்டனர் பேரப்பிள்ளை என்ற சாட்டோடு. (அவர்களிற்கு அவன் தானே ஆதாயம்) ஆனந்திவீட்டார் ஒதுங்கியே இருந்தனர் ஓடுகாலி என்ற வெட்டோடு. (சீதனம் இன்னும் கொடுக்கப்படவில்லையே) &lt;/p&gt;&lt;p&gt;
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எல்லாம் போயாச்சு. கலியாண வயசை தாண்டிய அக்கா. வயசை நெருங்கிய தங்கை. இருவரையும் காணுகையில் தான் செய்தது தப்பு என்று சீலனுக்கு புலப்படத்தொடங்கியது. வாய் வார்த்தையால் அவளை சாடத்தொடங்கியவன். சாட்டையால் அடிப்பது வரைக்கும் சென்று விட்டான். இரண்டொரு முறை அடிச்சு கலைச்சும் இருக்கிறான். தாய் வீடு என்று சென்றால் அங்கு தாய் இல்லை சித்திதாசன் தகப்பன், என்ன செய்யமுடியும்?. சுவரில் எறிந்த பந்து போல மீண்டும் அவனிடமே வந்து விடுவாள். இடர்களிற்கிடையில் இன்னொரு பெண் குழந்தை உலகை தொட்டுவிட்டாள். &lt;/p&gt;&lt;p&gt;
"&lt;strong&gt;அடி உதை பழகிவிட்டது, அடுப்பிற்கு வாழ்க்கைப்பட்டா நெருப்போடு வாழ்ந்து தானே ஆகவேணும்"&lt;/strong&gt; அனுபவித்தாள். பிரச்சனை வேறுவிதமாய் சென்றது. வாடகைக்கு வீடு கொடுத்த நண்பன் சீவாவுடன் ஆனந்தியை தொடர்பு படுத்தி புதிய பிரச்சனையை தொடக்கிவிட்டான் சீலன். அதுவரை அப்படி ஒரு எண்ணமே அவளுள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவனது சித்திரவதையை தாங்கியதே அவளுக்கு வேலையாச்சு. சிவாவும், சீலணும் சிறுவயசு நண்பர்கள் ஒன்றாய் வேலைக்கு சென்று ஒன்றாய் வீடுவருவார்கள். இதற்குள் அவன் வீட்டை வந்து சென்றான் என்பான். இரவும் பகலும் வேதனை, சிவாவும் இதை தெரிந்தும் தெரியாததும் போல நடந்து கொண்டான். "இந்த தொல்லை வேண்டாம் நாங்கள் வீட்டை மாறுவம்" என்றவளை. "ஏன்டி அங்க எவனாவது இருக்கிறானா?" என்று உதைப்பான் , துடிதுடித்துப்போவாள். அவனது வீட்டில் இருந்தும் எந்த ஆதரவும் இல்லை. வேண்டா பெண்டாட்டி மட்டும் அல்ல அவள் வேண்டா மருமகளும் கூட. &lt;/p&gt;&lt;p&gt;
அன்று அவளது வாழ்வில் பெரிய திருப்புமுனையாய் போனது, குழந்தைகளுடன் மாரடிச்சு ஒரு கறியும் சோறும் வைச்சிட்டு சீலன் என்ன இடியோட வாறானோ என்று ஏங்கிக்காத்திருந்தாள், அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. முழுவெறியோடு வந்து கறிச்சட்டியை தலையில் வைத்தான். வீட்டு மூலையினுள் போட்டு உதைத்தான். இன்னும் கொஞ்சம் ஏத்துவதற்காய் மீண்டும் வெளிக்கிட்டு போனான். அவன் செய்து விட்டு போன அபிசேகத்தை கழுவிவிட்டு அழுத குழந்தையை பால் கொடுத்து கிடத்திவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி தலை விதியை நினைத்து அழுதவளை ஒரு கை தொட்டது. திடுக்கிட்டு எழுந்தாள். &lt;/p&gt;&lt;p&gt;
முன்னால் நிண்டது சிவா, "பயப்பிடாதேங்கோ இதுவரை உங்கட முகத்தை கூட நான் பாத்ததில்லை, ஆனா பிறந்த அவனுக்கு பிறந்த குழந்தையை கூட சந்தேகப்படுற அளவிற்கு சீலன் போட்டான், இனி இவனோட வாழ்ந்து என்னத்தை காணப்போறியள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னோட வாங்கோ, எங்கையாவது கண்காணத இடத்திற்கு கொண்டு போய் உங்கள கண்கலங்காமல் வைச்சுக்காப்பாத்திறன், இப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரை இருந்ததில்லை சோத்துப்பானை வெளியில வந்த வேகத்தில எட்டிப்பாத்தன் சுடுகறிச்சட்டி தலையில வந்ததை, அந்த கணம் எனக்கு இப்படி கேக்க தோன்றியது, தப்பிருந்தா மன்னிச்சுக்கொள்ளுங்கோ, உங்களுக்கு விருப்பம் என்றால் யோசிச்சு சொல்லுங்கோ, சத்தியமாய் இப்படி ஒரு இழிஞ்ச மனிசனாய் ஒரு நாள் கூட நான் இருக்கமாட்டன்". என்றான். சட்டென அந்த நொடி அவளிற்கு தோன்றியது. அவனோட போயிடணும் இந்த நரகத்தில இருந்து தப்பி ஓடவேணும் என்ற ஒரே நினைப்பு. "&lt;em&gt;சரி நான் வாறன் இரண்டு குழந்தைகளையும் என்ன செய்யிறது"&lt;/em&gt; என்றவளுக்கு.&lt;em&gt; "எனக்கு எந்த&lt;/em&gt; பிரச்சனையும் இல்லை அதுகளை தூக்கிட்டு வாங்கோ". ஒரு கணம் யோசிச்சவள். குழந்தையை விட்டிச்சென்றாள். அதுகள் அவனிற்கு தண்டனையாய் இருக்கவேணும் என்றதால். &lt;/p&gt;&lt;p&gt;அவன் வரும் வரை ஒரு மறைவில் இருந்து பார்த்தவள் அவன் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றே விட்டாள். கடைசியாக அந்த மண்ணை அவள் மிரிச்சது அன்று தான். அதன் பின் அவளது பிள்ளைகள் பற்றி அப்பப்ப தகவல்கள் அறிந்த வண்ணம் இருந்தாள். இப்ப அவர்கள் வளர்ந்து பெரிய ஆக்கள், சீலன் வெளிநாடு சென்று விட்டான். அவளை தேடவே இல்லை. அவளை ஓடுகாலி நடத்தை கெட்டவள் என்று பல பெயர் கொண்டு அழைத்தது ஊர். "தினம் தினம் சித்திரவதை செய்த போது யாருமே நெருங்கிப்பார்க்கவில்லை ஒரு வார்த்தை பேசவில்லை இப்ப எல்லாரும் கண்டபடி பேசிறார்கள்" என்று அவள் கதறி அழுதபோது நான் ஆடிப்போய் நின்றேன். &lt;/p&gt;&lt;p&gt;
இத்தோடு அவளது முதல் தாலியின் கொடுமையான வரலாறு முற்றுப்பெற, இரண்டாவது தாலியின் சோக கதை என்னை எதோ செய்தது. சிவா சொன்ன மாதிரியே இருந்தான். சீலனைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசியத கிடையாது. அவன் ஒரு சாரதி. போதும் போதும் என்ற வருமானம் இருவரும் நின்மதியாய் வாழ்ந்தனர். என்ன தான் சந்தோசம் வந்தாலும் ஆனந்தியின் மனம் நடுவழியில் விட்டு வந்த இரு குழந்தைகளை அவள் இன்னும் மறக்கவில்லை, எப்படி மறக்க தொப்பிள் கொடி உறவென்பது சாதாரனமானதா ஒரு நொடியில் மறந்து விட? அவளது துயரம் தெரிஞ்ச சிவா அவளை வற்புறுத்தவில்லை. என்ன தான் இருந்தாலும் அவனது உதவிக்கு அவளால் முடிந்தது சிவாவிற்கும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்தாள் 2 வருடத்தில். வாழ்க்கை பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்கியது. தனிமையான நேரத்தில் மூத்த பிள்ளைகளை எண்ணி அழுவதும் உண்டு. சீவாவின் குழந்தையில் அந்த குழந்தைகளைப்பார்த்தாள். &lt;/p&gt;&lt;p&gt;விதி மறுபடி விளையாடியது, வாகன விபத்தொன்றில் சிவா உயிர் தவறியது. விதவைக்கோலம். அன்று தான் சீலன் உயிரோடு இருக்க சீவா இறந்து போனான். &lt;strong&gt;" நான் விதவையா சுமங்கலியா.?? எனது நிலை எனக்கே தெரியேல்லை"&lt;/strong&gt; என்று ஆனந்தி சொன்னபோது என்னவோ செய்தது.&lt;/p&gt;&lt;p&gt;
ஒரு குழந்தையுடன் இதே வீட்டில் இருந்தாள். சாதாரனமாயே ஒரு ஆணின் உழைப்பில் ஒரு குடும்பம் ஓடுவது கஸ்டம். யாரைத்தெரியும்? என்ன தெரியும்? பட்டினியாய் பல நாள் கிடந்தாள். அயலவர் பரிதாபத்தில் குழந்தை ஒரு நேரம் வயிராறியது. அப்போது தான் சீலணின் தம்பி கண்ணனின் பரிதாபம் ஆனந்தி மேல் விழுந்தது. அவள் கணவனை விட்டு ஓடி வந்தவள் என்பது அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருந்தார்கள். கண்ணன் அவளிற்கு ஆதரவாய் இருந்ததை பலர் பலவாறு பேசினார்கள். பல வருடமாய் அவர்களிற்குள் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. காலம் மாற்றியது, எத்தனை நாள் அவனை எதிர்பார்த்திருப்பது. நேரடியாகவே கேட்டாள், கண்ணன் இனி நீங்கள் எங்களுக்காய் கஸ்டப்படவேண்டாம். நான் திரும்பி ஊருக்கு போறன், என்ன நடந்தாலும் பாக்கிறன். என்ற கண்கலங்கி நிக்க, "நீங்க இனி அங்க போய் என்ன ஆனந்தி செய்யப்போறியள். என்னோட இருந்திடுங்கோ அண்ணாவை மாதிரி இல்லாட்டாலும் உங்களையும் பிள்ளையையும் நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் பட்ட கஸ்டங்களை ஒண்டும் விடாமல் அண்ணா எனக்கு சொல்லியிருக்கிறார்" என்றான். எந்த இலாபமும் இன்றி அவனிடம் எப்படி கடமைப்படுவது. ஒரு துணையின்றி மீதி வாழ்வை எப்படி அவள் கழிப்பது, பல வாறு யோசித்தாள். கடைசியாய் மீண்டும் ஒரு முறை அவனது தாலியையும் ஏற்றுக்கொண்டாள். 2 வருடத்தின் பின்னர் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப்பெற்றெடுத்தாள். வாழ்க்கை ஓடுது கண்ணனுடனும், அவனது குழந்தையுடனும், சீலனின் குழந்தையுடனும். அவளிற்கு 4 குழந்தைகள் 3 கணவன்கள். ஒரு முறை விதவையும் ஆனவள் மறுபடி சுமங்கலி..?? நாளை எப்படி இன்னும் அவளிடம் கேள்விக்குறியே மிச்சம். &lt;/p&gt;&lt;p&gt;தற்செயலாய் கண்ணனிற்கு ஒன்று நடந்தால் என்ன நிலை என்று கேட்டேன், தலை குனிந்தாள் குற்ற உணர்வோ? "கண்ணன் துணையிருக்க இனியாவது உனது சொந்தக்காலில் நிக்கப்பார். கண்ணீரோடு கதை சொல்லி கறைகளை கரைத்திட முடியாது" என்று கூறிவிட்டு வெளியேறினேன்.
&lt;/p&gt;&lt;p&gt;அவள் பற்றி எதை நினைப்பது என்று எனக்கு தோன்றவே இல்லை. பிறப்பிலேயே அவளை முடக்கி விட்ட விதியையா? அவளை கொடுமை செய்த சித்தியையா? சீதனத்திற்காய் அலைந்த சீலணையா? சுயமாய் தனக்கென்றொரு வாழ்வை திடமாய் அமைக்க முடியாது இழுத்தபாட்டிற்கெல்லாம் போக நினைத்த ஆனந்தியையா? யாரைக்குற்றம் சொல்ல? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-112203054501205532?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/112203054501205532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=112203054501205532' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112203054501205532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/112203054501205532'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/07/blog-post.html' title='ஒன்பதாவது முடிச்சு!'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-111998226160034548</id><published>2005-06-28T06:09:00.000-12:00</published><updated>2005-07-07T00:54:48.100-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன். இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம், இப்படியே ஒரு வித தனிமை குடிகொண்டது காரணம் எனக்கு மட்டும் தெரிந்த உண்மை. என்னோடு, என்மனதோடு காதலனாய், காவலனாய் வாழ்ந்த சிவா சித்திராவை காதலிக்கிறான் என்ற செய்தி எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போன மாதிரி ஒரு உணர்வு. அவன் எனக்கு என்று எண்ணிய நான் ஏனோ அவனுக்கு நான் தானா என்று பார்க்க மறந்துவிட்டேன்.
என்ர ஒரே ஒரு சிநேகிதி சித்திரா அவளிற்கு கூட தெரியாமல் எல்லோ அவன் எனக்குள் வாழ்ந்தவன். இரண்டு மாசத்திற்கு முதல் அவன் சித்திராவிற்கு தன் காதலைத்தெரிவிக்கும் படி என்னிடமே வந்து தூது சொன்னான் என்ர உயிரை யாரோ பறிச்ச மாதிரி தெரிஞ்சுது. சிரித்து சிரித்து கலா கலா என்று பேசுவானே. நீ வா போ என்று என்னோடு தடையின்றி பேசுவான், இந்த உரிமையை நான் யாருக்கும் இருவரை கொடுத்ததில்லையே. சித்திராவைவிட என்னோடு தான் அவன் அதிகம் பேசுவான். சித்திராவை கூட வாங்கோ, போங்கோ என்று அந்நியமாய் கூப்பிடுவானே. என்னோடு தான் அத்தனை நெருக்கம். அதனால் தான் அவன் எனக்குள் வந்தான். ஆனால் ஆனால் சித்திராவிற்காய் தான் அவன் என்னோடு நெருக்கமானான் என்பதை, அவன் காதலிற்கு தூது செல்லச்சொன்ன போது தான் நான் தெரிந்து கொண்டேன். சித்திரா கூட அவன்ர காதலை மறுக்கவில்லை அவன் சொன்னவுடன் எதிர்பார்த்திருந்தவள் போல சம்மதம் சொல்லிவிட்டாள். ஒரு வேளை இது தான் உண்மைக்காதலா தெரியவில்லை சிவாவின் உணர்வு சித்திராவிற்கு இருந்தது. ஏன் என்ர உணர்வு சிவாவிற்கு வரவில்லை காரணம் தெரியவில்லை, அதற்காய் அவன் உணராததால் என் காதல் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும். கொப்பி கொப்பியாய் 2 வருசம் அவனுக்காய் கவிதை என்ற பெயரில நான் எழுதியவற்றையும், அவன்ர பெயரையும் தேடித்தேடி அழிச்சனே என்ர மனம் அப்ப என்னை அறியாமல் அழுதிச்சே இதெல்லாம் பொய்யா? என் நண்பிக்காய் இவற்றை அழிக்க தான் என்னால் முடிந்தது மனசில எப்பவும் அவன் இருப்பான் என்று தான் நினைக்கிறன். ஒரு வேளை இதை யாருக்கும் முதலில சொல்லியிருந்தால் சிவாவை நான் இழந்திருக்க மாட்டேனோ என்று நினைக்கிறன். அவன் என்னை காதலிக்காட்டால் என்ன நான் காதலிச்சது அவனை அந்த நின்மதி போதும் எனக்கு. ஆனால் அவனும் சுயநலக்காரணா இதுவரை எப்படிப்பழகினவன். இப்ப நலம் கூட விசாரிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லை அவன் தவிர்க்கிறானா தெரியவில்லை. இப்ப கூட சித்திராவின் கலியாணத்திற்குரிய வேலைகளை செய்யத்தான் சித்திராவீட்டை வந்தன். ஆனா ஆனா இது சிவாவின் கலியாணமும் கூட. அவர்கள் காதல் வென்றிச்சா? என் காதல் தோத்ததா? காதலின் வெற்றி என்றால் என்ன கலியாணத்தில் முடிவதா? அப்படி என்றால் நான் தோர்த்தவள் தானே? தேற்றது என் நண்பியிடம் என்ற நினைவில் அவனது திருமண வேலையில் இறங்குகிறேன். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-111998226160034548?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/111998226160034548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=111998226160034548' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111998226160034548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111998226160034548'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/06/blog-post_28.html' title='என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-111218286382370058</id><published>2005-03-29T23:36:00.000-12:00</published><updated>2005-03-29T23:41:03.826-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார்</title><content type='html'>&lt;strong&gt;சர்வதேச ஆழிப்பேரலை நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே: சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார் &lt;/strong&gt;

இலங்கைத் தீவகத்தில் தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழிப்பேரலையால் தமிழர் தாயகப் பாதிப்பு விவரங்கள் குறித்தும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் தமிழர் உரிமை மையம் முறையீட்டு மனுவை அளித்துள்ளது. 

ஜெனிவாவில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத் தொடரின் தலைவரான இந்தோனேசிய நாட்டின் ஐ.நா தூதுவர் திரு. மக்கரிம் விப்பிசோனிடம் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயளார் ச. வி. கிருபாகரன் இந்த முறையீட்டு மனுவை அளித்தார்.

பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டு தமிழர் மனித உரிமைகள் மையம் இயங்கி வருகிறது. 

ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் தமிழர் மனித உரிமைகள் மையம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகியும் இன்னும் அங்கு எந்தவித சுமுகமான நிலையும் உருவாகவில்லை.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டது போல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை. இராணுவம் தொடர்ந்தும் மக்களை துன்புறுத்துவதுடன், பாதுகாப்பு வலயம் என்று கூறி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புக்கள் அடங்கிய பல பெரிய பிரதேசங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்க்காலத்தில் இருந்த இராணுவத்தினரை விட பல மடங்கு இராணுவத்தினர் தற்பொழுது உள்ளார்கள். கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் இராணுவத்தின் உதவியுடன் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கூலிப்படைகளினால் அரசியல் படுகொலைகள் தொடர்கின்றன. 

அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆழிப்பேரலை துயரங்கள் ஓர் மனித உரிமை மீறல் சம்பவம் இல்லாவிடிலும், சிறீலங்கா அரசு இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித மனிதாபிமான உதவியும் செய்யாத காரணத்தால் இது ஒரு மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. 

தொடர்ந்து சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களோஇ நிதி உதவிகளோ வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை கிடைக்கப்பெறவில்லை.

இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களேயாகும். இம் மாவட்டங்களில் உடனடி மீட்பு வேலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செய்தனர். 

இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் வேறு சில அரசசார்பற்ற நிறுவனங்களினாலுமே நிவாரணங்கள் கொடுக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசு உண்மைக்குப்புறம்பான தகவல்களுடன் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஐ.நா செயலாளர் நாயகம் அவர்கள் ஆழிப்பேரலை பாதிப்புக்களை நேரில் பார்வையிட சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த பொழுது சிறீலங்கா அரசு கோபி அனானை வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருந்தது. 

சிறீலங்கா அரசின் இச் செயற்பாடு ஐ.நா சபையின் அதிகாரப்பத்திரத்தின் சாரம் 100ஐ மீறிச் செயற்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். கோபி அனானைத் தொடர்ந்து சிறிலங்கா வந்த பல நாட்டுத் தலைவர்களையும் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது, ஓர் மனிதாபிமானமற்ற செயலாகும். 

இதேவேளை சிறீலங்கா அரசு பெரும்தொகையான பணத்தைச் செலவழித்து ஆயுதங்களை கொள்வனவு செய்து போருக்குத் தன்னை தயார் செய்கிறது.

இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான அனுதாபம் சர்வதேச சமூகத்திற்கு இருந்தபோதும், அதை வெளிப்படையாக காட்டத் தயங்குவது மிகவும் கவலை தரும் விடயம். இதனாலேயே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்கள்.

இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடரினால், இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மக்களைப்போல் சமனாக நடத்தப்படவேண்டும் என்று ஓர் கண்டனம் கொண்டுவருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் நிவாரண உதவிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

இத்துடன் அறிக்கைகளும், அட்டவணைகளும், ஒப்பீடுகளும் உங்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி: புதினம்

www.puthinam.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-111218286382370058?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/111218286382370058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=111218286382370058' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111218286382370058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111218286382370058'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/03/blog-post_29.html' title='சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார்'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-111203456363210904</id><published>2005-03-28T06:26:00.000-12:00</published><updated>2005-03-28T06:29:23.643-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>மீண்டும் பாரிய சுனாமி அபாயம் எழுந்துள்ளது</title><content type='html'>சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்துää இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய சுனாமி தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.    8.1 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துää இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும்ää இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படிää வடக்கு கிழக்கில்ää விடுதலைப் புலிகள்ää பாரிய ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை எழுந்து கடலுக்கு அப்பால் செல்லுமாறு அவசர அறிவித்தல்கள் விடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

www.puthinam.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-111203456363210904?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/111203456363210904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=111203456363210904' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111203456363210904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111203456363210904'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/03/blog-post_28.html' title='மீண்டும் பாரிய சுனாமி அபாயம் எழுந்துள்ளது'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-111195068213185554</id><published>2005-03-27T07:10:00.000-12:00</published><updated>2005-03-27T07:11:22.193-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்!</title><content type='html'>ஜெனீவா ஐநா கூட்டத்தொடர்: சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்!  

ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழவின் 61வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநா பணிமனையில் இடம்பெற்றுவருகின்றது. அனைத்துலக மனிதஉரிமைகள் சட்டங்கள்ää நெறிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் இடம்பெறும் இக் கூட்டத்தொடரின் ஆரம்பநாட்களில் சுமார் 90 நாடுகளின் உயர்மட்ட அரச அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகாரத்துறை செயலாளர்நாயகங்கள் உரையாற்றினார்கள். சிறீலங்கா வெளிவிவகாரஅமைச்சர் கதிர்காமர் மூன்றாவதுநாள் தனது நாட்டின் மனித உரிமைகள் பற்றிய உரையை வழங்கினார்.

அவ்வுரையில் தமது நாட்டில் சுனாமி நிவாரணங்கள் திறம்பட நடப்பதாகவும், சிவில் உரிமைகள் திறம்படப் பாதுகாக்கப்படுவதாகவும், அவசரகாலநிலை நீங்கிவிட்டதாகவும் கூறினார்.இக்கூட்டத் தொடர்களில் பிரதானமாக சீனா, அமெரிக்கா, கியூபா, நேபாளம், ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் என்பன அரச மட்டங்களில் தமக்குள் மோதிக்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்துலக அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் செச்சினியா, காஸ்மீர், ஆச்சே மற்றும் தமிழீழ விடயங்கள் பற்றிய கவனஈர்ப்புக்களை கோரி உரையாற்றினார்கள்.  அத்துடன் பெண்கள், சிறுவர்கள் மீதான உரிமைமறுப்பு விடயங்கள், பொருண்மிய கலாச்சார சமூக உரிமை மறுப்பு விடயங்கள், அரசியல் சிவில் உரிமை மறுப்புக்கள் என்பன போன்ற தலைப்புக்களில் விவாதங்கள், அறிக்கைகள் என்பன தொடர்ந்து வருகின்றன.இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஐநாவை மறுசீரமைப்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் புதிய கடுமையான பிரேரணைகள் மத்தியில் இடம்பெறுகின்றமையால் விறுவிறுப்பானதாகவே அமைகின்றது. அவரது புதிய திட்டத்தில் தற்போது இடம்பெறும் வடிவிலான கூட்டத்தொடர் மாற்றப்பட்டு பொதுச்சபை வடிவில் மனிதஉரிமைகள் விடயங்கள் ஆராயப்படும்.   இதன் மூலம் கியூபா, ஈரான், சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு மனித உரிமைகள் விவாதங்களின் போது செல்லுபடியற்றதாகிவிடும்.  ஏனெனில் தற்போதுள்ள ஆணைக்குழு வடிவில் அமெரிக்கா அரசியல் நோக்கில் முன்வைக்கும் மனிதஉரிமைகள் கரிசனைகள் விரிவான கடுமையான விமர்சனங்களுக்குட்படுகின்றது, எதிர்வரும் 7ம் திகதி செயலாளர் நாயகம் கொபி அனான் இங்கு உரையாற்றுவதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளமையால் இந்த மறுசீரமைப்பு விவகாரம் கடுமையாக சு10டுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் வடக்குகிழக்கு மனித உரிமைகள் ஆணைக்குழவின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் உயர்மட்டக்குழு உறுப்பினர் மாகாசிவம் ஆகியோர் அரசசார்பற்ற அனைத்துலக அமைப்புக்களின் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அத்துடன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் 6 பிரதிகளும்ää தமிழர் மனித உரிமைகள் மையத்தின் இரு உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.இவ்வாணைக்குழவின் முன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, மனித உரிமைகள் மையம் என்பன சார்பில் இருவேறு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, ஆணைக்குழு நிகழ்வுகளின் 9வது அட்டவணையின் கீழ் சமர்ப்பித்துள்ள   மனுவில் இன்றைய வடக்குக்கிழக்கு நிலவரம் தொடர்பான விடயங்களை தொகுத்து சமர்ப்பித்துள்ளது. இதுவரை நோர்வே மத்தியத்துவத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முயற்சிகளின் தோல்வகளை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துப் பிரிந்து செல்லும் தகைமைப் பெற்றுள்ளனர் என்கின்ற அனைத்துலக பிரகடனத்தின் அடிப்படையில் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய கதிர்காமர் சுனாமி நிவாரணங்கள் தொடர்பாக வெளியிட்ட பிழையான கருத்துக்களை மறுத்து பதிலளிக்கும் குறிப்பொன்றையும் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வெளியிட்டு பிரதிநிதிகளின் சுற்றுக்கு அனுப்பியது.  அதேவேளையில் அவசரகால நிலவரம் தொடர்பாக கதிர்காமர் தெரிவித்த பொய்களை  அம்பலப்படுத்தி nஐனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் வடக்குக்கிழக்கு மனிதஉரிமைகள் பணிமனையின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் வெளியிட்ட கருத்துக்கள் பத்திரிகை செய்திக்குறிப்புக்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டது.
இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய இத்தாலியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக உரிமைகள் மற்றும் விடுதலைக்கான அமைப்பின் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் காலகட்டத்தை நோக்கி தள்ளப்படுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டி உரையாற்றினார். சனநாயக சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட டியற்றி மக்னோல்ட் இன்றைய சிறீலங்கா நிலவரம் தொடர்பான நிலவர உரையை ஆற்றினார். இங்கு உரையாற்றிய அனைத்து இனப்புறக்கணிப்புக்கும்ää இனவாதத்திற்கும் எதிரான யப்பானிய அமைப்பின் சிறப்புப்பிரதிநிதிää  சுனாமி நிவாரணங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணிப்புகளுக்கு உட்பட்டது தொடர்பான கண்டனத்தை வெளியிட்டார். தெற்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களிற்கான புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டு விட்டன ஆனால் வடக்கிலும்ää கிழக்கிலும் தொடர்ந்தும் மக்கள் கூடாரங்களில் நம்பிக்கையற்று வாழ்வதாக அவர் நிலைமை விபரித்தார். இதேவேளையில் ஐநாவின் காணமற்போனவர்களுக்கான சிறப்பு பணிக்குழு ஆணைக்குழவிற்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் இலங்கையில் சிறீலங்காப் படைகளால் பிடிக்கப்பட்டு காணமல் போன 12227 பேரின் நிலவரம் தொடர்பான தமது விசாரணைகள் தொடர்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் தம்மால் 1991ää 1992ää 1999 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு திருத்தங்கள்ää பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா செயற்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. அத்துடன் காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிநிதிகளில் பாகுபாடு காட்டடப்படக் கூடாது எனவும் கோரியுள்ளது.  இவ்வாண்டு சனவரிவரை ஐநாவின் சிறப்புப் பணிக்குழவின் தகவல்களின் பிரகாரம்ää 12227 காணமல் போனவர்களின் விபரங்களை ஐநா சிறீலங்கா அரசிடம் கோரியிருந்தது. அவற்றில் அரசு 5338 நபர்களின் விபரங்களை ஐநாவிற்கு சமர்ப்பித்திருந்தது. இதில் 5254 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்ää 24 பேர் படையினரின் கைகளில் உள்ளனர். 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதிவிபரங்களை அரசு ஐநாவிற்கு இன்னமும் வழங்கவில்லை. இவற்றில் செம்மணியில் கொல்லப்பட்ட தமிழர்களும் அடங்குவர். இன்றும் உலகில் காணமல் போனவர்களின் நிலுவை கூடுதாலகக் கொண்ட முன்னணி நாடாக சிறீலங்காவேயுள்ளது.
தொடர்ந்தும் கூட்டத்தொடர் ஏப்பிரல் இரண்டாம் வாரம்வரை இடம்பெறுகின்றது.

தகவல்
[www.sooriyan.com]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-111195068213185554?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/111195068213185554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=111195068213185554' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111195068213185554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111195068213185554'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/03/blog-post_27.html' title='சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்!'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-111159180774683016</id><published>2005-03-23T03:28:00.000-12:00</published><updated>2005-03-23T03:30:07.756-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)</title><content type='html'>நடக்கிறதுகளைப்பார்க்க எரிச்சல் எரிச்சலாய் இருந்தது கவிதாவிற்கு இரண்டாவது முறையாக மீண்டும் மணமேடையில் மணப்பெண்ணாய்.அதே ஐயர், அதே மண்டபம், நெருப்பு, அதே மந்திரம், ஆனால் இம்முறை மாப்பிள்ளை மட்டும் மாற்றம். "என்ன இது இவர்கள் இப்படி எத்தனை நாளைக்கு தான் இந்த மந்திரம் தந்திரம் என்று ஏமாற்றப்போகிறார்கள்" தனக்குள் நொந்து கொண்டாள். இத்தனை மந்திரங்களையும் அன்றொருநாள் ஒன்றும் விடாமல் ஒப்பித்தவள் தானே கவிதா.எத்தனை எதிர்பார்ப்புக்களுடன் கணவனுடன் அப்படி பழகவேணும், இப்படி சிரிக்க வேணும் என்று எத்தனை நாள் நினைத்தது நினைத்து கற்பனை பண்ணி இதே மணமேடையில் தாலியையும் ஏந்திக்கொண்டவள். இவர்களது மந்திரம் வாழ்த்துக்கள் நெருப்பு எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை மணமகளாய் இருந்து பெறுவாள் என்று எதிர்பார்த்தாளா.? எரிச்சலை அடக்கிக்கொண்டு ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் ஒன்றும் விடாமல் ஒப்பித்தாள் வேண்டாவெறுப்பாய்.அவளது முகத்தில் இருந்த எரிச்சலை புரிந்து கொண்ட வசி கேட்டான். "ஏன் கவிதா என்ன சூடாய் இருக்கிறீங்க?". "ஒன்டும் இல்லை வசி, தயவுசெய்து சும்மா இருங்கோ பிறகு கவலைப்படப்போறீங்க" இரகசியமாய் சொன்னாள். மணப்பெண்ணல்லவா? மணமகனுடன் மணமேடையில் அதிகம் கதைத்தால் சிரிப்பார்கள் அதிலும் இவள் இரண்டாவது தடவை மணமகள். "எனக்கு தெரியும் கவிதா நீங்க என்ன நினைச்சீங்க என்று, சரி வேண்டாம் விடும்". என்று அவனே தவிர்த்துக்கொண்டான்.இன்று வசியைக் கவிதா இரண்டாவதாக மணம் முடிக்கிறாள். இரண்டு வருடங்கிளிற்கு முன்னர் இதே மேடையில் இத்தனை சுற்றமும் சூழ வசியின் அண்ணா சசிகரனை மணம் முடிச்சு திருமண பந்தத்தில் நுழைந்தவள். ஒரு பாதி நாளும் அந்த பந்தத்தை அனுபவிக்க முடியாதாவளாய் போய்விட்டாள். கலியாணம் முடிந்த முதல் இரவு கணவன் என்ன கேட்பான் எப்படி பதில் சொல்ல என்று ஆவலாய் அறையில் நுழைந்தவளுக்கு இடி பின்னால் வந்தது. வெட்கத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகம் கண்ணாடியில் தெரிந்தது. கண்ணாடியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சசி பேச்சு எதுவுமே இல்லை. அருகில் இருந்த அந்த கண்ணாடியில் கவிதாவின் உருவம் தெரிந்தது. கணவன் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான் என்று எண்ணி வெட்கத்துடன் தலை குனிந்தாள் கவிதா.தீடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத்திறந்தாள். சசியின் தாய் தண்ணீரும் மாத்திரையுமாய் வந்தாள். "இல்லைப்பிள்ளை குளிசை போட மறந்திட்டான் அது தான் கொண்டுவந்தனான்" என்றாள். என்ன குளிசை? ஏன்? எதற்கு? எத்தனையோ கேள்விகளைக்கேட்க நினைத்தவள் அடக்கி கொண்டு "என்னட்ட தாங்கோ அத்தை நான் கொடுக்கிறன்" என்று வாங்கியவள். "என்னத்திக்கு அத்தை இவ்வளவு குளிசை பாவம் சசி என்றாள்". "என்ன செய்யிறது அவனின்ர விதி பிள்ளை யார் என்ன செய்ய முடியும்" என்று விட்டு நகர்ந்தாள் சசியின் தாய். குளிசைகளிற்கிடையில் நித்திரைக்குளிசைகள் இரண்டு முழித்துக்கொண்டிருந்தன. என்ன இது என்று புரியாதவளாய் அவனிடம் மாத்திரைகளை நீட்டினாள். வாங்கி அதை விழுங்கியவன் அப்படியே சிறிது நேரத்தின் பின் தூங்கிவிட்டான். அவளிற்கு எப்படித்தூக்கம் வரும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை அவளுடன்.இல்லற வாழ்வில் இணைய காத்திருக்கும் இரு சோடிகளில் ஒன்றிற்கு இப்படியா நித்திரைக்குளிசை கொடுப்பார்கள். கோவித்த படி மெல்ல கதவை திறந்து வெளியில் வந்தவளிற்கு எதிரில் தென்பட்டவள் சசியின் தாய் தான். அவளிடம் விசாரித்ததில் தான் தெரிந்தது அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது. இந்த விடயம் கவிதாவின் பெற்றோருக்கும் தெரியும் என்பது கவிதாவிற்கு பேரிடியாக விழுந்தது.சிறுவயதில் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காய் அனுப்பப்பட்டவன் தான் சசி. சிறுவயதில் அவனிற்கு வேண்டிய அன்பு பாசம் அரவணைப்பு எல்லாத்தையும் இழந்தவன். அதை ஏங்கி ஏங்கி தவித்து தனியாக வாழ்ந்தவன் இன்று இந்த நிலையிற்கு வந்துவிட்டான். பார்க்காத வைத்தியர்கள் இல்லை வெளிநாட்டிலும் சரி இலங்கையிலும் சரி எல்லாரும் அன்பும் பாசமும் தான் அவனிற்கு முக்கியம் என்று கூறிவிட்டார்கள். உடனேயே அவன் தாய் தந்தையாரிடம் வந்துவிட்டான். இலங்கை வந்தபின்னும் பல வைத்தியர்களிடம் காட்டினார்கள். எந்த பிரயோசனமும் இல்லை என்பது தான் பதில். தனிமையையே நாடிய சசி திடீரென சத்தம் போடுவதும், கத்துவதும் என்று எல்லாரையும் பயப்பிடித்தினான். அப்பொழுது தான் சசிக்கு ஒரு திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.இவர்களது காலம் கவிதாவிற்கும் அப்பொழுது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தரகர் ஒருவர் மூலம் இருகுடும்பத்திற்கும் இடையே இணைப்பு ஏற்பட்டது. சசியின் தாய் எல்லாவிடயங்களையும் கவிதாவின் பெற்றோருக்கு கூறியிருந்தார். மிகவும் வசதியான குடும்பம், அது மட்டும் அவர்களது கண்களிற்கு தெரிந்தது. கவிதா நல்ல பொறுமைசாலி அவளால் நிச்சயமாக சசியைக்குணப்படுத்த முடியும் என்று முடிவெடுத்தார்கள். இருந்தும் இதுபற்றி கவிதாவிடம் எதுவும் அவர்கள் பேசவில்லை. பெற்றோர்கள் தனக்கு தீங்கைச்செய்யப்போவதில்லை என்ற முழுநம்பிக்கையில் கவிதா மேலதிகமாய் எந்த ஆராச்சியிலும் ஈடுபடவில்லை. திருமணத்திற்கும் சம்மதித்தாள். அது தான் அவள் செய்த ஓரே ஒரு தவறாய் இருக்கலாம். இன்று தான் இந்த விடயம் எல்லாம் அவளிற்கு தெரிந்தது. இத்தனையும் அறிந்த பின் என்ன செய்வது என்று ஏதும் அறியாமல் நின்றாள். பெற்றோரே இப்படி செய்வார்கள் என்று எந்த பெண்ணாவது எண்ணுவாளா.? அதுவே அவளிற்கு இடியாய் விழுந்தது. உண்மையை முதலில் சொல்லியிருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எல்லாரும் சேர்ந்து ஏமாற்றிய ஒரு உணர்வு. எங்கையாவது போய்விட வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் சசியின் நிலையையும் அவனது குடும்பத்தையும் பார்க்கையில் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ற எண்ணம் தான் தோன்றியது. எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் அமர்ந்து கொண்டாள். எப்படி மனதை தேற்றிக்கொண்டாலும் சசியை கணவன் என்பதைவிட அவன் ஒரு மனநோயாளி என்பது தான் அவளிற்கு தெரிந்தது.முதல் இரவு என்பது தாம்பத்தியத்தில் மறக்க முடியாத இரவு என்பார்கள். அவளிற்கும் அதே போல் தான் ஆனால் இந்த இரவு வந்திருக்க வேண்டாம் என்பது தான் அவளது எண்ணம். அன்றைய இரவு அவளது தூக்கம் சோபாவினுள் அடங்கியது. நீண்ட நேரம் விழித்திருந்தாள் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது. காலை ஆறுமணி இருக்கும் ஒரு அழைப்பு "கவிதா எழும்பி போய் கட்டிலில் படுக்கலாமே". புதிய குரல் தன்னை உசார் படுத்திக்கொண்டு விழித்துப்பார்த்தாள் அது சசி. "இல்லைப்பறவாய் இல்லை" என்றவள் எழுந்தாள். "I am very sorry" என்று அவன் அவளைப்பார்த்து சொன்னான். அவன் ஏன் அப்படிச்சொன்னான் என்பதற்கு காரணம் அவள் தேடவில்லை. அவன் நல்ல மனநிலையில் இருக்கும் போது பேசுகின்ற ஒரு சில வார்த்தைகள் இவை.இப்படித்தான் அவர்களது வாழ்க்கை ஆறு மாதங்களாய் ஓடியது என்று தான் சொல்லவேண்டும். சசியின் அழைப்பில் விழித்துக்கொண்டவள். எழுந்தவுடன் விறுவிறு என்று வெளிக்கிட்டு எங்கேயோ அவசரமாய் சென்றாள். "என்ன அண்ணி அவசரமாய் கிளம்பீட்டீங்க வீட்டையோ!? எதிர்ப்பட்டவன் வசி. "ம் ஒருக்கா போயிட்டு வாறன்" என்று ஒரே சொல்லில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். வீட்டிற்கு சென்றவள் அவர்கள் இரவு சொன்னது எல்லாம் பொய்யாய் இருக்கக்கூடாதா என்று எண்ணியபடி வீட்டினுள் நுழைந்தாள். இத்தனை வெள்ளென மகளைக்கண்ட பெற்றோருக்கு நெஞ்சு பதை பதைத்தது. "என்னம்மா என்ன நடந்தது" என்று பதற்றத்துடன் விசாரித்தார் தகப்பன். "அப்பா சசிக்கு பயித்தியம் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஏன் எனக்கு சொல்லலை" . கேள்விகளை கணையாய் தொடுத்தாள். "என்னம்மா இப்படிகேக்கிறாய் சசிக்கு ஒன்றும் பயித்தியம் இல்லை ஒரு சிறிய மனக்குழப்பம் அவ்வளவும் தான்" என்று தாய் கூறிய போது கவிதாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. "அப்ப உங்களிற்கு அந்தவிடயம் தெரியும் ஏன் எனக்கு சொல்லேல்லை. என்னை எப்படியாவது தொலைச்சுப்போடவேணும் என்று நினைச்சியள். செய்து முடிச்சிட்டியள் அப்படித்தானே?". என்று கேட்டவளிற்கு பதில். அவள் கார் பங்களா வேலைக்காறி என்று சந்தோசமாய் இருக்க வேணும் என்று நினைத்தார்களாம். அப்படி ஒரு வாழ்வு இத்தனை நாளும் அவளிற்கு கிடைக்கவில்லை இனியாவது சந்தோசமாய் வாழட்டும் என்று தான் செய்தார்களாம் இது அவர்கள் பதில். நெஞ்சே வெடித்து போய்விடும் போல் இருந்தது கவிதாவிற்கு. என்ன இவர்கள் பெற்றவர்கள் மாதிரியா பேசுறார்கள். வசதியும் பணமும் இருந்தால் போதுமா.? சந்தோசம் வேண்டாமா.? பல கேள்விகளைக்கேட்டவள் இனி செய்வதற்கு ஏதும் இல்லை. விதி வழி வாழ்க்கை போகட்டும் என்று நினைத்துவிட்டு. "சரியம்மா காரையும் பங்களாவையும் கட்டிக்கொண்டு நான் வாழுறன். இனி உங்களிற்கு ஒரு மகள் இருந்தாள் என்றதை மறந்திடுங்க. எனக்கு ஒரு தலைவலி என்றால் பணம் ஓடிவந்து மருந்து தரட்டும். அந்தப்பணம் மட்டும் எனக்கு போதும் என்னைப்பாக்கிறதிற்காய் இனி அங்கினை வரதேங்கோ. இன்றையோட முடிஞ்சிது எனக்கு இந்த வீட்டு உறவு. பணத்திற்காய் ஆசைப்பட்டு என் தங்கைகள் வாழ்க்கையயையும் இப்படி ஆக்கிப்போடாதேங்கோ அவர்கள் ஆவது நல்லாய் இருக்கட்டும்" என்று கண்ணீரால் கதையை சொல்லிவிட்டுச்சென்றாள்.இப்படியே தான் ஆறு மாதங்கள் காலம் போனது. எப்படி அவளால் கணவனையோ அவனது குடும்பத்தையோ தண்டிக்க முடியும்? அவர்கள் என்ன செய்தார் என்ற எண்ணத்தோடு இப்படியே காலத்தை கழிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டால் கலியாணம் முடிந்து ஒரு சில வாரங்களில் அவள் மீண்டும் வேலைக்கு போக தொடங்கிவிட்டாள். யாருடன் தனது கதையைச்சொல்லி அழுவது யாரையும் அவளிற்கு பிடிக்கவில்லை. பெற்றவர்களே இப்படி ஏமாற்றும் போது வேறு யார் உண்மையாக இருப்பார்கள் என்ற எண்ணம் தான். வேலை முடிந்தால் வீடு வீட்டில் எந்த நேரமும் கையில் புத்தகம். ரமணிச்சந்திரனின் கதைகள் யாவையும் கரைத்துக்குடித்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேற்று மனிதர்கள் போல் தான் அவளிற்கு. ஏதோ கடமைக்கு பழகுவது போன்று. வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமலே போய்விட்டது. கணவனுக்கு அவளும் முடிந்தளவு முயற்சி செய்து விட்டாள். வைத்தியரிடமும் பல முறை காட்டினாள்.அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டார்கள் என்று பலர் பேசினார்கள். சசி என்ன நேரம் எப்படியிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவனிற்குள் நெருடல். ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் அழிந்து விட்ட குற்ற உணர்வு. இதுவே அவனது கதையை முடித்தது. அந்த உணர்வினாலேயே ஓரு நாள் தற்கொலைக்கு சென்று விட்டான். இதுவரை ஏதோ ஒரு உறவு அவளை அங்கு வைத்திருந்தது. நேயாளியாய் எனினும் கணவன் இருந்தான். அந்த உறவும் முறிந்து போனது. சசிக்கும் கவிதாவிற்கும் இடையில் இருந்த உறவு எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். தாமரையிலையில் தண்ணியைப்போலத்தான் அவர்கள் எட்டி நடந்தார்கள். கணவன் இறந்த ஒரு சில மாதங்களின் பின் கவிதா அங்கிருந்து வெளியேறிவிட்டாள். வீட்டில் எல்லோருடைய சம்மதத்துடன் தான். அவர்களும் எப்படி மறிப்பார்கள்.? தாலி ஏற்படுத்திய உறவால் அங்கிருந்தாள். அந்த தாலியே இல்லை என்றானபின் அவள் விலகிக்கொண்டாள். இருந்தாலும் அவளினுள் உறுத்தல் தன்னால் ஒரு உயிர் பறிபோய்விட்டதாய் வருத்தம், அங்கிருக்கும் நிமிடங்கள். என் அண்ணணை என் பிள்ளையை கொன்றுவிட்டாயே பாவி என்று கேட்பது போல் ஒரு உணர்வு.அவள் வெளியேறிவிட்டாள். வேலை செய்யும் இடத்திற்கருகில் ஒரு பெண்கள் விடுதியில் சரனடைந்து கொண்டாள். தாய்வீட்டிற்கு செல்ல அவளிற்கு மனசு இடம் கொடுக்கவில்லை வாவென்று அழைக்க முடியாதவர்களாய் அவர்களும் வரச்சொல்லி வற்புறுத்தினார்கள். வெட்டி விட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதில் அவளிற்கு விருப்பமில்லை. விதவை என்ற சொல்லைத்தவிர அவளிற்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. வெறுமை வெறுப்பு யாவும் சூழ்ந்த நிலை பழகிப்போய்விட்டது.சசியின் குடும்பத்திலிருந்து அடிக்கடி ஒருரிருவர் வந்து அவளைப்பார்த்துச்செல்லவது வழக்கம். அவளும் அதைத்தடைசெய்வில்லை. இப்படித்தான் ஒரு நாள் வசி வந்தான். " கவிதா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும்" என்றான். சசிக்கும் கவிதாவிற்கும் பெரிய வயசுவித்தியாசம் இல்லை கவிதா அவனைவிட ஒரிரு வயது குறைந்தவள் தான். "என்ன வசி சொல்லுங்கோ" என்றாள். அவன் ஒரு சிறு துண்டை அவளிடம் நீட்டினான். "கவிதா இதை அண்ணா சாகமுதல் எழுதி என் அறையில் வைத்திருக்கிறார். எனக்கு என்ன செய்யிறதென்று என்று தெரியயேல்லை. அம்மா அப்பாவுக்கும் காட்டினனான் அவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதைப்பாத்திட்டு உங்கள் முடிவைச்சொல்லுங்கோ எதுவானாலும் எனக்கு பிரச்சனையில்லை. நீங்கள் எங்கட வீட்டை எப்படி வாழ்ந்தீங்கள் என்று எனக்கு நல்லாய் தெரியும். உங்கள் முடிவு தான் வேணும். உங்கட வீட்டில யாரிட்டையும் நாங்கள் பேசேல்ல ஏற்கனவே பிரச்சனை தானே" என்று கூறினான். "சரி கவிதா நான் போயிட்டு வாறன். ஆறுதலாய் யோசியுங்கோ பிறகு ஒரு பதில் சொல்லுங்கோ இது உங்கட வாழ்க்கை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.என்னவென்று புரியவில்லை கவிதா புரியாதவளாய் அந்த காகிதத்தை பிரித்தாள். அது சசியின் கையெழுத்து பொதிந்த ஒரு கடிதம்.வசிக்கு எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் சாரம் இது தான். கவிதா அவன் தாலிகட்டிய மனைவி. அதைவிட அவளிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு பாவமும் அறியாத பெண்ணின் வாழ்வை தன்னால் அழிந்து விடக்கூடாது என்பதற்காய் சகலதும் அறிந்த தம்பி வசி. அவளைப்புரிந்து மீண்டும் மணந்து கொள்ள வேண்டும் எனபதே. அதுவும் அவன் விரும்பினால் மட்டும் என்று குறிப்படிட்டிருந்தான்.தன்னை அழித்து தன் மனைவிக்கு வாழ்வழிக்க எண்ணியிருந்தான் அவன். இதை சசியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டார்கள். சசியின் பெற்றோரும் வந்து அவளுடன் கதைத்தார்கள். அவளது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் என்றால் இன்னொரு மணம் புரிவது தான். அவள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அறியாத ஒருவனை திருமணம் செய்வதை விட வசியை மணம் முடிப்பதால் ஏற்படும் புரிந்துணர்வை எடுத்துக்கூறினார்கள். அவளிற்கும் அது சரி என்றே தோன்றியது.ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவளிற்கு மறுமணம் இன்று நடக்கிறது. அவள் மீண்டும் மருமகளாய் வசியின் மனைவியாய். இன்று ஆகப்போகிறாள். குனிந்த தலையுடன் கவிதாவின் பெற்றோரும் மீண்டும் ஒரு முறை அறுகரிசிபோட்டு வாழ்த்தினார்கள். அவள் எதிர்பார்த்த வாழ்க்கை ஒரு உயிரின் மறைவின் பின் கிடைத்ததில் அவளிற்கு வருத்தம். இருந்தும் அவனின் தியாகத்தில் அவள் வாழ்வு ஆரம்பமாகப்போகிறது. அவள் மீண்டும் வாழுப்போகும் வீட்டில் உள்ள மனிதர்களை எண்ணி நெகிழ்ந்து கொண்டு தன் பெற்றோர்களை ஏதோ வேண்டா வெறுப்பாய் பார்த்தாள். அவளைப்பொறுத்தவைர அவர்கள் செய்தது இன்னும் துரோகமே...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-111159180774683016?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/111159180774683016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=111159180774683016' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111159180774683016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/111159180774683016'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/03/blog-post.html' title='தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110898366241993610</id><published>2005-02-20T22:58:00.000-12:00</published><updated>2005-02-20T23:01:02.423-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>சுனாமிப் பரீட்சை - நிலாந்தன்.</title><content type='html'>சுனாமி 2004 ஆசியாவுக்கு அழிவை மட்டும் கொண்டுவரவில்லை அது சில நாடுகளுக்கு சோதனைகளையும் -பரீட்சையையும் வைத்திருக்கிறது. இந்தச் சோதனையில் குறிப்பிட்ட நாடுகள் சித்தி பெறுமா இல்லையா என்பதில்தான் அந்த நாடுகளின் தலைவிதியே தங்கியிருக்கிறது.
இந்தோனேசியா இப்பொழுது முதற்கட்டமாக அந்தச் சோதனையை எழுதிக்கொண்டிருக்கிறது. அங்கே அச்சே போராளிகளுக்கும் இந்தோசிய அரசாங்கத்திற்குமிடையில் அண்மையில் பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் முன்னால் பி;ன்லாந்து பிரதமர் மார்ரி அஃரிசாரியின் அனுசரனையுடன் கடந்த மாதக் கடைசியில் மேற்படி பேச்சுக்கள் தொடங்கியிருக்கின்றன.
அங்கே ஏற்கனவே இருந்து வந்த ஒரு யுத்தநிறுத்தம் முறிக்கப்பட்டு சண்டைகள் தொடங்கி நடந்துகொண்டிருந்த ஒரு சூழலில் சுனாமி அச்சேயைத்தாக்கியது. இப்பொழுது சுனாமியின் பெயரால் அங்கே பேச்சுக்கள் மறுபடியும் தொடங்கியிருக்கின்றன.
ஆனால், இலங்கைத் தீவிலோ அரசாங்கம் இன்னமும் இந்தச் சோதனையில் அமர்வதற்கே தயாரில்லை. அயலில் உள்ள பேரரசுகள் எதையாவது பிடித்து குதிரை ஓடலாமா என்றே சந்திரிகா சிந்திப்பது போல தெரிகின்றது.
யோசனைகள், மாற்று யோசனைகள், திருத்தப்பட்ட யோசனைகள் என்று கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமிடையில் ஹெலிகொப்டர்கள் சலியாது பறந்து கொண்டிருக்கின்றன. அறிக்கைகள், பேட்டிகள், பத்திரியாளர்கள் சந்திப்புக்கள் என்றெல்லாம் சுனாமி அரசியலானது சுனாமிக்கு முன்பிருந்த அலே சலிப்பூட்டும் அருவருப்பான தடத்திற்கே திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது.
சுனாமிக்கு முன்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் பெருமளவுக்கு தேங்கி நின்றுவிட்டிருந்த ஒரு சூழலிலும் இப்படித்தான் யோசனைகள், மாற்று யோசனைகள் திருத்தப்பட்ட யோசனைகள் என்று ஹெலிகெப்டர்கள் வீணே பறந்தன. ஒரு கட்டத்தில் மாவீரர் நாள் உரையோடு எல்லாவற்றுக்கும் ஒரு எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. ஆனால் சுனாமி வந்து அந்த எல்லைக்கோட்டை தள்ளிவைத்துவிட்டது. அதே சமயம் சுனாமி, புதிய எல்லைக்கோடுகளை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி சுனாமியின் அகதிகளை மீளக் குடியமரத்துவதற்கும் அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டியொழுப்புவதற்குமாக உடனடியாக ஒரு நிர்வாக பொறிமுறைக்கான கட்டாயத்தை அது கோரி நிற்கிறது.
முன்பு யுத்தத்தின் அகதிகளை வரையறையின்றி காத்திருக்க வைத்துக்கொண்டு ஹெலிகெப்டர்கள் வீணே பறந்தன. ஆனால், இப்பொழுது சுனாமியின் அகதிகளை அவ்வாறு காத்திருக்க வைக்கமுடியாது. ஏனெனில் யுத்தத்தின் அகதிகளை விடவும் சுனாமியின் அதிகள் அதிகம் சர்வதேச மயப்பட்டவர்களாகக் காணப்டுகிறார்கள். ஒரு விதத்தில் சர்வதேச சமூகம் அவர்களை தத்தெடுத்துவிட்டது போல ஒரு தோற்றம் உண்டாகியிருக்கிறது.
எனவே யுத்தத்தின் அகதிகளைப்போல சுனாமியின் அகதிகளை அநாதைகளாக தனித்துவிட முடியாத ஒரு நிலை. இதனால் சுனாமியின் அகதிகளை பராமரிப்பதற்கும் அவர்களுடைய வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்குமான ஒரு நிர்வாகப் பொறிமுறை எனப்படுவது அதிகமதிகம் சர்வதேச மயப்பட்டதாகவே அமைய வேண்டியிருக்கிறது.
யுத்தத்தின் அகதிகளுடைய வாழ்வை மீளக்கட்டி எழும்புவதற்காகவே புலிகள் இடைக்கால நிர்வாக ஏற்பாடு ஒன்றை கேட்டு வந்தார்கள். அதை ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்திரிகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச சமூகமும் அது விசயத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் கையாலாகாததாக மாறும் ஒரு நிலை தோன்றிக்கொண்டிருந்த போதே புலிகளின் மாவீரர் நாள் உரை வந்து.
இப்பொழுது சுனாமி அரசியலில் அந்த இடைக்கால நிர்வாக ஏற்பாட்டில் பிரேரிக்கப்பட்டிருந்த ஒரு விசயத்தின் மீது- நிதி நிர்வாகத்தின் மீது- அதிக கவனம் குவிக்கப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் சம்பந்தப்பட்ட எல்லாத்தரப்புக்கும் உருவாகியிருக்கிறது.
சிறிலாங்காவுக்கு வரும் சுனாமி நிதியில் தமிழர்களுக்குரிய பங்கை எப்படி கையாளுவது என்பதற்கான ஒரு நிர்வாக பொறிமுறை பற்றியே இப்பொழுது யோசிக்கப்படுகிறது. இப்பத்தியில் சில வாரங்களுக்கு முன் கூறப்பட்டது போல அப்படியொரு நிர்வாகப் பொறிமுறை பற்றி சிந்திப்பது என்பது ஒரு இடைக்கால நிர்வாக ஏற்பட்டில் நிதிக் கையாளுகை பற்றி எடுக்கப்படக் கூடிய முடிவுகளுக்கு அடிப்படையாக அமையக்கூடும். அதாவது ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சர்ச்சைக்குரிய சில பகுதிகளைக் குறித்து தீவிரமாக சிந்தித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை சுனாமி கொண்டு வந்திருக்கிறது.
இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால்... முன்பு சந்திரிகாவும் ஜே.வி.பியும் எதைக் குறித்துப் பேசத் தயாராக இல்லாமலிருந்தார்களோ அதைப் பற்றி உடனடியாக முடிவெடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் தோன்றியிருக்கிறது என்பதே.
ஒரு புறம் அரசாங்கம் தெற்கில் தனது சொந்த சிங்கள மக்களுக்கே ஒரு வினைத்திறன் மிக்க நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியாமல் திணறுகிறது. இன்னொரு புறம் வட-கிழக்கிற்கான ஒரு நிர்வாகப் பொறிமுறைபற்றி அதுவும் எதிர்காலத்தில் எந்த ஒரு இடைக்கால நிர்வாக ஏற்பாட்டிற்கும் கருவாக அமையக்கூடிய ஒரு நிர்வாகப் பொறிமுறைபற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.
தெற்கில் சுனாமிக்குப் பிந்திய நிலைமைகளை கையாள்வதற்கு அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கும் நிர்வாகக்கட்டமைப்புகள் அநேகமாக தோல்வியடைந்துவிட்டன என்று கூறப்படுகின்றது. இத்தகைய கட்டமைப்புகளில் ஒன்றிற்கு பொறுப்பாவிருந்தவரும் சந்திரிகாவின் மிக நெருங்கிய சிநேகிதியுமான கலாநிதி தாரா டிமெல் கடந்தகிழமை தனது பொறுப்பை ராஜினாமா செய்ததை இங்கே சுட்டிக்காட்டலாம். இது தவிர சுனாமி உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 30விகிதத்தினருக்கு மட்டுமே கிடைத்திருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திலக் ரணவிராஜ கடந்த கிழமை கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை- 7ஆம் திகதியுடன் இந்த விகிதம் 75ஆக மாற்றப்பட்டு விடவேண்டும் என்று சந்திரிகா கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளாராம்.
அதாவது தனது சொந்தச் சிங்கள மக்களுக்கே ஒருவினைத்திறன் மிக்க ஒழுங்கான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியாது திணறிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் வட-கிழக்கில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று ஒரு நிர்வாகக்கட்டமைப்பை அதுவும் அதிகம் உணர்ச்சிகரமான ஒன்றை உருவாக்கவேண்டிய ஒர நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது.
இது அவர்களைப்பொறுத்தவரை ஒரு சோதனை. அவர்களுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் இது சோதனைத்தான். சிறிலங்காவின் சமாதான முயற்சிகளை விடவும் சிறிலாங்காவின் சுனாமி அரசியல் ஒப்பீட்டளவில் அதிகம் சர்வதேசமயப்பட்டதாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகைய ஒரு பின்னணியில் இது விசயத்தில் அரசாங்கம் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதும், அந்த முடிவு அதிகாரப்பகிர்வின் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும் விதத்தில் அரசாங்கத்தின் மீது செல்வாக்கை அல்லது அழுத்தங்களை பிரயோகிப்பதில் மேற்கு நாடுகள் எத்தகைய வெற்றிகளை பெறக்கூடும் என்பதும் தான் இலங்கைத்தீவின் முழுச்சமாதான முயற்சிகளுக்குமான ஒரு குறிகாட்டியாக அமையப் போகிறது.
இப்படிப்பார்த்தால் சுனாமிப்பரீட்சை சிறிலாங்காவிற்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்திற்கும் தான். இந்தப் பரீட்சையில் இரு தரப்பும் பெறப்போகும் பெறுபேறுகளே இனி சமாதானத்தின் மீதான தழர்களின் நம்பிக்கைகளைப் புதுப்பிக்கும்.
இல்லையென்றால், எதற்கெடுத்தாலும் பேச்சுவார்த்தை என்று சொல்லி முடிவுகளை எடுக்காது பேசிக்கொண்டிருப்பதன் மூலம் ஏதோ பெரிதாக நடக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் ஒரு தந்திரமே இது என்று தமிழர்கள் விரக்திவசப்பட நேரிடும்.
கடந்த சுமார் மூன்று ஆண்டுகால யுத்தநிறுத்தத்தில் புனிதமிழந்து கொண்டே வரும் விவகாரங்களில் ஒன்று பேச்சு வார்த்தை.
எதற்கெடுத்தாலும் பேச்சுவார்த்தை என்று சொல்லி அனுசரனையாளரையும் மினக்கெடுத்தி புலிகளையும் மினக்கெடுத்தி ஊடகக்காரர்களையும் மினக்கெடுத்தி இதன்மூலம் காலத்தைக் கடத்துவதே சந்திரிகாவின் சமாதானத்திற்கான உத்தியாக இருந்து வந்துள்ளது.
எதற்கெடுத்தாலும் ஒரு பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தைகளைத் தொடங்;குவதற்கும் ஒரு பேச்சு வார்த்தை. பிறகு புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளைப் பரிசீலிப்பது பற்றிப் பேசுவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை. இப்பொழுது சுனாமி நிதிநிர்வாகக் கட்டமைப்பைப் பற்றிப்பேசுவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை.
இப்படியே போனால் பேச்சுவார்த்தை என்ற பொறிமுறை அதன் புனிதத்தை இழந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் போரைத் தொடங்குவதற்கும் ஒரு பேச்சுவார்த்தை என்ற ஒரு நிலை வந்தாலும் வரலாம்.


[ தகவல்-  www.sooriyan.com]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110898366241993610?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110898366241993610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110898366241993610' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110898366241993610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110898366241993610'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_20.html' title='சுனாமிப் பரீட்சை - நிலாந்தன்.'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110794980846339583</id><published>2005-02-08T23:47:00.000-12:00</published><updated>2005-02-08T23:51:33.340-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>கௌசல்யன் கொலைக்கு ஐ.நா. கண்டனம் </title><content type='html'>விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. ஐ.நா. சபை இன்று விடுத்துள்ள இந்தக்கண்டன அறிக்கையில் கௌசல்யன் படுகொலையைக் கண்டித்திருப்பதுடன் சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் செயலாளர் நாயகம் கோபி அனான் வேண்டுகொள் விடுத்துள்ளார். அமைதியையும் கட்டுப்பாடுகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும்படி கோரியுள்ள அனான்ää படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------
[puthinam]

&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110794980846339583?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110794980846339583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110794980846339583' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110794980846339583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110794980846339583'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_110794980846339583.html' title='கௌசல்யன் கொலைக்கு ஐ.நா. கண்டனம் '/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110786888250571939</id><published>2005-02-08T01:19:00.000-12:00</published><updated>2005-02-08T01:21:22.506-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;தாக்குதல் சம்பவத்துக்கு அரச புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு&lt;/span&gt; 

  தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளருமான கௌசல்யன் உட்பட நால்வர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவை குற்றம் சாட்டியுள்ளனர்.    இப்படுகொலைச் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கௌசல்யன் உட்பட புலிகளின் ஐந்து போராளிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஆயுதக்குழுக்களும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து விடுதலைப்புலிகளை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதிக்கவுள்ளதுடன் இதுவரை காலமும் கட்டியெழுப்பப்பட்டு வந்த சமாதான முயற்சிகளுக்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக்குழுப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்ää யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் இது என்றும்;ää இப்படியான சம்பவங்கள் மேலும் பரவலடையாமல் தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் புலிகளும் உறுதிபூண வேண்டும் என்றும் கூறினார்.
தாக்குதல் சம்பவம் பற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து கூறுகையில்ää இந்தத் தாக்குதல் முன்னரே செம்மையாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் அல்லது பாரிய பதில்த் தாக்குதல் ஏதேனும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசுää தலைநகர் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

[puthinam]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110786888250571939?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110786888250571939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110786888250571939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110786888250571939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110786888250571939'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_08.html' title='புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110779795714742972</id><published>2005-02-07T05:38:00.000-12:00</published><updated>2005-02-07T05:39:17.146-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் மீது துப்பாக்கிச் சூடுää </title><content type='html'> மட்டு. அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் மீது துப்பாக்கிச் சூடுää அவருடன் மேலும் நால்வர் வீரமரணம்  ஜ மட்டக்களப்பு நிருபர் ஸ ஜ திங்கட்கிழமைää 07 பெப்ரவரி 2005ää 22:52 ஈழம் ஸ  பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாமல்கம பிள்ளையாரடி என்ற இடத்தில் இன்று இரவு இடம் பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டஅரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 4 போராளிகளும் வாகன சாரதியொருவரும் உயிரிழந்துள்ளார்கள்.    வன்னியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் வாகனத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் அவரது மெய்க்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் போராளியொருவரும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயக்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் நாமல்கம என்னும் கிராமத்திலுள்ள பிள்ளையார்கோவிலுக்கு காணிக்கை செலுத்தி விட்டு வாகனத்தில் ஏறிய சமயம் இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது வரை எத்தகைய கருத்துக்களும் வெளியாகவில்லை. 
[puthinam]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110779795714742972?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110779795714742972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110779795714742972' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110779795714742972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110779795714742972'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_07.html' title='அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் மீது துப்பாக்கிச் சூடுää '/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110761534243122755</id><published>2005-02-05T02:51:00.000-12:00</published><updated>2005-02-05T02:55:42.430-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வேசி மகள்..! (சிறுகதை)</title><content type='html'>ஊர் முழுதும் ஒரே பரபரப்பு. அந்தப்பொண்ணா இப்படி செய்தாள்? பலரது மனங்கள் ஒரே மாதிரி கேள்வியை வினவ வைத்தன. என்ன தான் செய்தாலும் பெற்ற தாயை இப்படி ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்திருக்கக்கூடாது என்று சிலர் நொந்தும் கொண்டார்கள்.  கொலையை துணிவாய் செய்த சசி ஏன் செய்தாள் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும். இப்படி செய்திட்டாளே என்பது தான் அவர்கள் ஆதங்கம். அதற்கு விளக்கம் சொல்லவும் அவள் விரும்பவில்லை. அவளைப்பொறுத்தவரையில் சமூகத்தில் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு விபச்சாரியைத்தான் கொலை செய்திருந்தாள். அதற்குப்பிறகு தான் அவளது தாய்.  பெற்ற தாயாக இருந்தாலும் சமூகத்தை சிரழிக்க காரணமாய் இருந்தவள் உயிருடன் இருக்க கூடாது என்று நினைத்தவள். தனது கொள்கையில் எந்த மாற்றமும் அற்றவளாய், தான் செய்த குற்றத்திற்கு நியாயம் தேடாதவளாயும் தான் இதுவரை இருக்கிறாள். பதினாறு வயது நிரம்பிய பெண்ணவள்.

இதுவரை தாயே உலகமாய் தான் வாழ்ந்தவள். ஊரில் உள்ள பலர் அவளையும் தாயையும் கண்டு விலகித்தான் நடந்தார்கள் அப்பொழுது எல்லாம் காரணம் என்னவென்று அவளிற்கு தெரிந்ததில்லை. அப்பொழுதெல்லாம் அவர்கள் மனசில்லாதவர்கள் என்பது மட்டும் தான் அவளிற்கு தெரியும். அவளை எத்தனையோ தடவை வேசி மகள் என்று மற்றவர்கள் பேசிய போதும். அதற்குரிய அர்த்தம் என்னவென்று அப்பொழுது அவளிற்கு தெரியவில்லை.

அவளது பிறப்பு கூட ஒரு தேவையற்ற பழிக்குரிய பிறப்பாய் தான் இந்த உலகில் ஆரம்பமானது.  சசியின் தாய் சாந்தி அவளது வயதில் அழகாய் கண்ணுக்கு இலட்சணமாய் தான் இருந்தாள். பலரை காதல் வலையில் விழவைத்தது அவளது அழகு. குடும்ப வறுமை அத்தோடு கௌரவம் கட்டுப்பாடு என்று, அவள் காதல் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவளிற்கு அழிவு அவளது அழகால் வந்தது. அவளைக்காதலித்தவர்களின் ஒருதன் அவளால் மறுக்கபட்டவர்களின் ஒருதன். அவளை சீரழிக்க திட்டமிட்டிருந்தான். அதற்கு கைகொடுத்தாற்போல் ஊரில் திருவிழா நடந்தது. திருவிழாக்காலங்களில் இரவு நேரங்களில் திரைப்படம் போடுவது வழக்கம். படத்திற்கு போவதற்காய் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி உத்தரவு வாங்கி வேளைக்கு வந்திடுவதாய் கூறிச்சென்றாள் சாந்தி.

தாய் எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள் என்று பாதியில் வெளியேறி தனியாய் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கையில் அவளைத்தொடர்ந்து வந்த இருவர் அவளை சீரழித்து விட்டார்கள். விடிய அவள் ஒரு பற்றையில் கிடந்தாள். என்ன நடந்தது என்பது அரைவாசி தான் அவளிற்கு தெரியும்.  அவள் கெடுக்கப்பட்டாள் என்று ஊரில் பேச்சு. பேச்சு வந்த அடுத்த நிமிடம் அவளிற்கு ஆறுதல் சொல்வதற்காய் கூட காத்திருக்காத தாய், தூக்கில் தொங்கிக்கொண்டாள். சிறுவயதில் தந்தையை இழந்த சாந்தி என்ன செய்வது உறவுகள் நன்றாய் இருக்கும் போது கூட எட்டி நடந்தவர்கள் கெட்டுப்போன நேரத்திலா உதவப்போகிறார்கள்?. பசி பாதி பட்டினி பாதியாய் திரிந்த சாந்தி கூலி வேலைக்கு கூட செல்ல முடியாது தவித்தாள். அவள் போகுமிடம், வருமிடம் எல்லாம் அவளை தீண்டத்தகாத தொழு நோயாளி போலப்பார்த்தார்கள்.   நாற்று நட்டு, களை எடுத்து மற்றவர்களிற்கு கூலி வேலை செய்வது தான் தாயினதும் அவளதும் வேலை. அதைத்தவிர அந்தக்கிராமத்தில் செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது. அவளது வேலை கூட கெட்டுப்போனவள் இவள் இங்க வந்தாள் வேலை செய்கிற ஆண்களும் வேலை செய்ய மாட்டாங்கள், என்று பழியுடன் பறிக்கப்பட்டது. உறவுகள் அற்ற நிலையில், வேலையும் அற்ற நிலையில் கஸ்டப்பட்டாள். என்ன செய்ய பெரிய பரம்பரைப்பணக்கார்கள் வீட்டிலா பிறந்தாள்.

பரம்பரைச்சொத்தை அழித்து திண்ண.? வறுமை தாண்டவம் ஆடியது. அப்போ அவளை ஆறுதல் படுத்த ஒரு சில ஆண்கள் மட்டும் ரகசியமாய் வந்தார்கள். அவர்களது வரவு ஆரம்பத்தில் அவளிற்கு கசந்தாலும். அவளினுள் உருவான கருவை வளர்ப்பதற்காய், அவர்கள் வருவதை அவள் தடுக்கவில்லை. அவர்களது வரவு இதுவரை ரகசியமாய் இருந்த போதும். மெல்ல மெல்ல அது கசிந்து அவள் விபச்சாரி என்ற பெயரை பெற்றுக்கொண்டாள். அப்படி பிறந்தவள் தான் சசி. ஊரினால் உறவுகளால் அயலவர்களால் வெறுப்புடன் பாக்கப்பட்ட அவள்.

தனது வீட்டிற்கு வந்து போகும் ஒரு சிலர் தான் மனிதர்கள் என்று எண்ணியிருந்தாள். அவர்கள் வரும் பொழுது சசி வீட்டில் நின்றால், அவளது கையில் 10, 15 ரூபாய்களை வைப்பார்கள். சசியை ரொபி வாங்கி சாப்பிடச்சொல்வார்கள். அறியா வயது காசைக்கண்டவுடன் ஊரிலே உள்ள ஒரே ஒரு கடை அங்கே சென்று தனக்கு வேண்டியவற்றை வாங்கி, அவள் திரும்பிவர சில சமயங்களில் தாயைக்காண முடிவதில்லை. சில சமயங்களில் வந்தவர்களை காணக்கிடைக்காது. அறியா வயது வருபவர்களை மாமா, மாமா என்று அன்புடன் அழைப்பாள். காலம் காத்திருக்கவில்லை அவளும் வயதடைந்தாள். வீட்டிற்கு வருபவர்களை தாய் மெல்ல மெல்ல குறைக்கத்தொடங்கினாள்.  இருந்தும் ஒரு சிலர் வந்தவண்ணம் தான். காலம் செல்ல செல்லத்தான் தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

வேசி மகள் என்று ஊரில் ஒரு சிலர் கூறியதற்கான அர்த்தம் என்னவென்று. இப்பொழுது தான் அவளிற்கு புரிந்தது. தன் தாய் ஒரு விபச்சாரி என்பதை அறியக்கூடிய வயசை அடைந்து விட்ட அவளால் அதை தாங்க முடியவில்லை. அவளது ஆசிரியை ஒருவர் மூலம் தன் தாய் ஒரு விபச்சாரி என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். அப்பொழுது தான் தனது கைகளில் வைக்கப்பட்ட சில்லறைகளிற்கான காரணங்கள் புரிந்தது. ஒரு சில நாள் யோசித்தாள் தாய் என்பவள் அவளது மனதில் இருந்து எங்கையோ சென்றுவிட்டாள். அண்மையில் அலரிவிதை அரைத்து உண்டு ஊரில் யாரோ இறந்ததாய் அறிந்திருந்தாள். "இப்படிப்பட்ட ஒரு தாயின் மகளாய். பிறக்கும் போதே பிறந்து விட்டேன் இனி என்ன செய்ய" என்று எண்ணியவள் தன் வாழ்வை அதே வழியில் அழித்து விட எண்ணினாள்.
ஊரிலே அலரிவிதைகளிற்கு பஞ்சம் இல்லை. பொறுக்கிவந்து நன்றாய் அரைத்து அதை தான் உட்கொள்வதற்காய் தயாரானவள். "நான் செத்து இந்த உலகிற்கு என்ன செய்யப்போறேன். என்ர அம்மா போன்ற சமூகத்தூரோகிகளை இப்படி விட்டுவிட்டு நான் போய் என்ன செய்ய" என்று எண்ணியவள்.

தன் தாயைக்கொலை செய்வதற்காய் துணிந்துவிட்டாள். சாந்தியின் உணவில் விசம் வைத்து கொடுத்து அவள் குற்றுயிராய் இருக்கும் வேலை தான் சொன்னாள். "அம்மா நீ எப்படி பிழைப்பு நடத்திறாய் என்பது எனக்கு இப்போ புரிஞ்சிட்டுது. என்னை எப்படி வளர்த்தாய் என்பதை இப்ப புரிஞ்சிட்டுது. நான் இனி வாழக்கூடாது என்று நினைச்சன். அதற்கு முதல் என்னால முடிஞ்சது இந்த சமூகத்தில் கிருமியாய் இருக்கிற உன்னை எடுக்கவேணும் என்று நினைச்சன் செய்திட்டேன்.  ஒரு மகளாய் உன்னைக்கொலை செய்தாலும் ஒரு சமூகப்பெண்ணாய் நான் செய்தது ஒரு களையெடுப்பு" என்றவள். தானும் அலரி விதையை விழுங்க துணிந்து விட்டாள். அனால் அதை தாய் அனுமதிக்கவில்லை. "நான் செய்தது பாவம் அப்படி என்று நீ நினைச்சால் அதை நீ எனக்கு செய்தது மூலம் துடைச்சிட்டாய்.  உனக்காக தான் இதுவரை இப்படி எல்லாம் வாழ்ந்தன் நீயும் செத்திட்டால் நான் இப்படி வாழ்ந்தற்கு அர்த்தம் என்ன? நீ அதை விழுங்காதே கடைசி ஆசையாய் உன் தாயின் ஆசையை நிறைவேற்று" என்று கெஞ்சினாள்.

அத்தோடு சாந்தியின் அத்தியாயம் முடிந்தது. "அம்மா நீ சாகும் போது உனக்கு உறவாய் நான் இருக்கிறன். நான் சாகும் போது அனாதையாய் தான் போகப்போகிறேன்". என எண்ணிக்கொண்டாள் சசி. அவளை இதுவரை ஒரு மனிசியாய் பார்த்து சுக துக்கங்களை தெரிந்து கொண்ட அவளது ஆசிரியை சகல விடயமும் அறிந்து. சசியைப்பார்க்க வந்திருந்தார். தாயின் உடலை காவல் துறையினர் கொண்டு சென்றபின் சசியையும் காவல் துறையினர் அழைத்துச்சென்றுவிட்டார்கள். அங்கு வந்த ஆசிரியை "ஏன் சசி இப்படி அவசரப்பட்டாய்" என்று கேட்டாள். "இதுவரை தன்னைப்பற்றி எந்த விடயமும் உனக்கு தெரியக்கூடாது என்கிறதில உங்க அம்மா றொம்ப கவனமாய் இருந்தா, ஆனால் உண்மை எப்படியும் வெளியில வந்திடும். நீ என்னிடம் கேக்கும் போது. இப்படி செய்வா என்று நான் நினைக்கல." என்றார். அதற்கு சசி "ஏன் ரீச்சர் அம்மாவை நான் கொலை செய்யல ஒரு சமூகதுரோகியை தான் கொலை செய்தன். இது தப்பு என்றால் நான் என்ன செய்ய?" என்றாள். "எந்தச்சமூகத்திற்காய் நீ உன் தாயைக்கொலை செய்தியோ. அந்த சமூகம் தான் உன் தாயை இந்த நிலைக்கு உருவாக்கினது தெரியுமா? அவளுக்கு தெரியாமல் யாரோ செய்த தப்பை அவள் மேல போட்டு.  அவளை ஒரு மனிசியாக்கூட பாக்காத இந்தச்சமூகம் அவளுக்கு எத்தனை செய்திச்சு? அதை சிந்திச்சுப்பாத்தியா? சும்மா இப்படி விபச்சாரியா வரணும் என்று உங்க அம்மா ஆசைப்பட்டாவா? தான் கெட்டுப்போன பின்னும் கூட வேலை செய்து சாப்பிடவும் உன்னை வளர்க்கவும் தானே ஆசைப்பட்டா.  அப்ப வேலை கொடுக்காத இந்த சமூகம் தானே அவளை இந்த நிலைக்காக்கினது. இது யார் தப்பு, அவளது தப்பா..?? அல்லது தன்னைத்தொலைச்சிட்டு வந்த போது. அவளிற்கு நம்பிக்கை கொடுக்க கூட வேண்டாம் சாகும் போது அவளையும் கூட்டிக்கொண்டு போகாதது யார் தப்பு. தாய் செய்த தப்பா அவள் செய்த தப்பா? கூலி வேலை செய்து என்றாலும் உழைச்சுசாப்பிட எண்ணிய அவளிற்கு இந்த கொடுமையைக்கொடுத்த கடவுள் எங்க போனான் இப்படி தவறு செய்தது எல்லாரும் சேர்ந்து நீ தண்டிச்சது மட்டும் அவளையா? இற்றவரைக்கும் உன்ர அப்பன் யார் என்கிறது.  உன் தாய்க்கு மட்டும் அல்ல யாருக்கும் தெரியாது. இப்ப இருக்கிற மாதிரி அந்தக்காலத்தில காவல் துறையும் இல்லை பொலீஸ் இல்லை. இதுவரை உன் அப்பன் யார் என்று கூட தெரியாது. இப்படி உன் பிறப்பிலும் வாழ்விலும் எத்தனையோ. பேர் தவறு செய்திருக்கிறாங்க. நீ உன் அம்மாவை கொண்டது எந்த விதத்தில சரி என்று யோசி தெரியும்" என்றாள். சற்றும் காத்திருக்காதவளாய். " ஏன் ரீச்சர் அவமானத்தின் சின்னம் நான். நான் என்ன காதலில கிடைச்ச பரிசா? இல்லை ஒரு புனிதமான உறவில பிறந்தவளா? என்னை ஏன் பெற்றெடுத்தா? இதுவரை அம்மா எனக்கு என்ன சொன்னவா? அப்பாவை ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டான் என்று தானே? வயிறை வளக்கிறதுக்காக உடலை விக்கிற அளவிற்கு போக வேண்டிய நிலை ஏன் வந்தது. அம்மா தன் தாயுடன் சேந்து செத்துப்போய் இருந்தால் கூடப்பறவாய் இல்லை மானத்தைவிற்றுப்பிழைக்க வெளிக்கிட்டாவே இது சரி என்கிறீங்களா..?? தன்னால மானத்தோட என்னை வளர்க்க முடியும் என்றால் பெற்றிருக்கலாம். என்னை பெறுறதிற்காக அவங்க மானத்தை விற்றா என்கிறது என்னால ஏற்க முடியல.  நியாயமா மானத்தோட வாழ முடிஞ்சா வாழ்ந்திருக்கலாம் இல்லாட்டால் அலரி விதையை திண்டு செத்திருக்கலாம் அது எவ்வளவோ மேல். நீங்க சொன்ன தவறுசெய்த ஒவ்வொருவரையும் தண்டிக்கிறதுக்காக அவங்க செய்த செயல் அவங்கள புனிதமாய் நினைத்து சிலைவைக்கிற செயலா?. செத்திருந்தால் கூட மானத்தோட செத்தாள் என்று இருந்திருக்கும். தன்னை விற்று திண்டாள் என்பதை விட அது மேல் இல்லையா"?. என்று பல கேள்விகளை அடுக்கினாள் சசி. "சசி உன் அம்மா ஒருத்தியை உன்னால அழிக்க முடிஞ்சிச்சு. ஆனா இப்படி எத்தனை பேர் இருக்காங்க. அவங்க எல்லாரும் இப்படி சந்தர்ப்பமும் சமுதாயதாயத்தாலும் இப்படி மாற்றப்பட்டவங்க தான். சமூகமே திருந்தும் வரை இதை ஏதும் செய்ய முடியாது" என்றார் . "என்ன சொல்லுறீங்க ஏது சமூகம் நீங்களும் தான் சமூகம் நானும் தான் அதில அடக்கம். நாங்க செய்கிற தப்புகளை சமூகத்தின் மேல் போடுறதில எந்த சரியும் இல்லை. இது தவிர்க்கப்படவேண்டுமே தவிர நியாயப்படுத்தப்பட வேண்டியது அல்ல." என்று ஆணித்தரமாய் முடித்தாள். என்ன சொல்ல முடியும் அவளது நிலை கண்டு வருந்திய ஆசிரியை "சரி இனி நீ என்ன செய்வதாய் உத்தேசம்" என்று கேட்டார். " வழக்கில என்ன சொல்லினமோ அதைத்தானே செய்யனும். நான் செய்தது சரி என்று சொல்ல வரல என் தப்புக்கு தண்டனையை அனுபவிக்க நான் தயார்" என்றாள். அவள் 18 வயது நிறையாதவள் என்பதால் அவளை நன் நடத்தைக்கல்லூரியில சேர்ப்பதற்காய் உத்தரவு இடப்பட்டது.

தனி மரமாய் போன அவளிற்கு அடிக்கடி ஆசிரியை ஆறுதலாய் வந்து பேசுவாள். அவளது இலட்சியம் எல்லாம். தன் தாயைப்போல சமூகத்தின் பெயரில சாட்டைப்போட்டுக்கொண்டு இப்படி செய்கிறவர்களை திருத்துவதும். அவர்களை இப்படி பட்ட நிலைக்குள் தள்ளுபவர்களை களை எடுப்பதற்குமாய் ஆன போலீஸ் அதிகாரியாய் ஆவது தான். இலட்சியத்தில் பெரிய இலட்சியமாய் தன்னை அவமானச்சின்னமாய் பிறக்க வைத்த அந்த பிறப்பையும் தேடியபடி இலட்சியத்தில் குறியாய் இருக்கிறாள். அது நாளை நிறை வேறலாம். சகல சமூகத்தையும் இப்படி பட்ட தவறில் இருந்து திருத்த முடியாவிட்டாலும். ஒரிருவரை திருந்தினாலும் அது நாளைய பலரது இனிய வாழ்விற்கு வழி வகுக்கலாம். ஒரு தனி மனிசியாய் அவளால் உலகை திருத்த முடியாவிட்டாலும் ஒரு சில மனிதர்களை எனினும் திருத்த முடியும் என்ற நம்பிக்கையில். !
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110761534243122755?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110761534243122755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110761534243122755' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110761534243122755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110761534243122755'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post_05.html' title='வேசி மகள்..! (சிறுகதை)'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110735391032967126</id><published>2005-02-02T02:15:00.000-12:00</published><updated>2007-03-09T07:47:12.332-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>தழலிடு!  (காசி ஆனந்தன்)</title><content type='html'>காட்டிக் கொடுப்பவன் எங்கே?
அந்தக்! கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே!
தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து!

அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

பல்லாயிரம் நாட் பயிரை வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன்
உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
காசி ஆனந்தன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110735391032967126?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110735391032967126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110735391032967126' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110735391032967126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110735391032967126'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/02/blog-post.html' title='தழலிடு!  (காசி ஆனந்தன்)'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110656817280293285</id><published>2005-01-23T23:59:00.000-12:00</published><updated>2005-01-24T00:02:52.803-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>26/01/05 துக்க தினமாக அறிவிப்பு.</title><content type='html'>LTTE declares January 26 as National Day of Mourning

"Liberation Tigers declare 26th January as a National Day of Mourning to remember those who lost their lives in the Tsunami disaster in Tamil Homelands and in other regions of South Asia. Let us all participate in the grief and sorrow of all who have lost their loved ones on this day," said Liberation Tigers of Tamil Eelam in a press release issued from its Kilinochchi political offices Sunday.
Translation of the full text of the press release issued in Tamil follows:
"Our people suffered untold hardship, destruction and misery during the two decades of war. The ceasefire provided our people, especially to those living in the sea coast, a chance to resume fishing to rebuild their lives.
It is under this circumstances the force of the tidal waves hit the Southeast Asian region including Sri Lanka causing unprecedented devastation on the 26 December 2004. Our people living in coastal areas of Tamil homeland have been severely affected. The fury of nature has rendered our people homeless, traumatized them by taking away lives of their loved ones and forced them to seek shelter in welfare centers and in homes of their friends and relatives.
Liberation Tigers declare 26th January as a National Day of Mourning to remember those who lost their lives in the Tsunami disaster in Tamil Homelands and in other regions of South Asia. Let us all join in the grief and sorrow of all who have lost their loved ones on that day.
Let us light our memorial lamps in our Tamil Homeland and in all Tamil Homes across the countries of the world, and reserve a place in our hearts and remember the lives lost at the moment in time when the force of Tsunami took the lives of our brothers and sisters.

[tamilnet.com]

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை விடுத்த அறிக்கை

அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்.
தமிழீழம்.
23.01.2004
பத்திரிகை அறிக்கை

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் மிகுந்த துன்பங்களையும் அழிவுகளையும் சொல்லொணாத இடர்களையும் சந்தித்த எமது மக்கள் வாழ்க்கையின் அனுகூலங்கள் அனைத்தையும் இழந்தனர். தற்போது நிலவிவரும் போர் நிறுத்த காலத்தில் எமது மக்கள் கடற்கரையோரங்களில் குடியேறி தமது வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை மேற்கொண்டு வாழ்வியல் அனுகூலங்கiளை ஓரளவு உள்வாங்கத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த 26.12.2004 அன்று சற்றும் எதிர்பாராத விதமாக பொங்கி எழுந்த நிலவதிர்வுப் பேரலைகள் இலங்கைத்தீவு உட்பட தென்னாசியப் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கைத் தீவில் எமது தாயகப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் அதிகமான அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் இடம்பெயர்ந்த எமது மக்கள் தமது உறவுகளையும் வாழ்விடங்களையும் இழந்து பிரிந்த தமது உறவுகளின் சோகத்துடன் மனது பேதலித்த நிலையில் மீண்டும் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இருந்து வருகிறார்கள். இப்பேரனர்த்தம் காரணமாக தமிழர் தாயகத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 26.01.05 நாள் தேசிய துக்கதினமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நாளில் தமது அன்புக்குரியவர்களையும் உறவுகளையும் இழந்து துடிக்கும் எமது உறவுகளின் சோகத்தில் பங்குகொள்வோம். மூர்க்கமாக எழுந்த கடலலைகளில் சிக்கி எமது உறவுகள் உயிர்நீர்த்த அந்தக் கணத்தில் தமிழர் தேசத்திலும் புலம்பெர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்துவோம்

&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110656817280293285?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110656817280293285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110656817280293285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110656817280293285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110656817280293285'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/260105.html' title='26/01/05 துக்க தினமாக அறிவிப்பு.'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110641469690597993</id><published>2005-01-22T05:20:00.000-12:00</published><updated>2005-01-22T05:24:56.906-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தாரமானபின் (சிறுகதை)</title><content type='html'>நண்பர்களுடன் பேசி அவர்களை வழி அனுப்பி விட்டு அறையினுள் நுழைந்து தலையை சீவி அலங்காரத்தில் ஈடுபட்டான் ஈசன். இன்று தான் அவன் திருமணம் முடிந்து இல்லற பந்தத்தில் நுழைகிறான். அது தான் நண்பர்கள் அறிவுரை கூறி வழியனுப்பி விட்டு சென்றார்கள். அறையினுள் நுழைந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்த போது புதிதாய் ஒரு ஒளி தெரிவாதாய் தோன்றியது. கங்கா மனைவியாய் வந்தது அவனுக்கு சந்தோசம். ஒரே ஊர் சிறுவயது முதல் நல்ல பழக்கம் இருவருக்கும். நீண்ட நாட்களாய் நண்பர்களாய் இருந்து ஒரு வருடம் காதலர்களாய் இருந்து இன்று கணவன் மனைவியாய் ஆனாவர்கள்.
ஒரு ஐந்து மாசத்திற்கு முதல் ஒரு முத்தம் கேட்டு கங்காவிடம் வேண்டிக்கட்டிய நினைவு இன்று ஈசனுக்கு வந்தது. "வாடி மவளே இன்டைக்கு வைச்சிருக்கேன்" என்று சிரித்த படி சற்று பின்னோக்கி  நினைத்தான். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த போது இரு பகுதியும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. நன்றாய் பழகியவர்கள், புரிந்து கொண்டவர்கள், வாழ்வில் ஒன்று சேர்வதில் எதும் பிரச்சனை இருக்கவில்லை. கங்காவின் பட்டப்படிப்பு முடிய ஐந்து மாசம் இருந்ததனால் அதன் பின் கலியாணம் செய்வது என்று இரு பகுதியும்  ஒன்று  சேர்ந்து முடிவெடுத்தனர். இவர்கள் இருவரும் காதலர்கள், ஆனால் கங்கா மிகவும் கண்டிப்பானவள் இத்தனை நாள் பழகியும் ஈசனுடன் தனியாய் ஒரு நாளும் வெளியில் சென்றதில்லை, ஒரு நாள் கூட திரைப்படம் பார்க்க சென்றிருந்ததில்லை. அவள் வரமாட்டாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் கேட்டதில்லை. நண்பர்கள் எல்லாம் தங்கள் காதலி முத்தம் தந்தாள், கட்டிப்பிடித்தாள். என்று கூடிக்கதைக்கும் போது இவனை மட்டும் ஏளனமாய் பார்ப்பார்கள். இப்படி அவர்கள் கதைக்கும் போது கங்காவை அரக்கி என்று கூட தனக்குள் திட்டியிருக்கிறான். ஆம் கங்காவின் கையைக்கூட அவன் பிடித்து நடந்ததில்லை. அவள் அப்படி ஒரு அரக்கி தான் ஆனால் அவனது செல்ல அரக்கி எதற்கும் தனக்கு சுதந்திரம் வேணும் என்று எண்ணுபவள். செய்வது எல்லாவற்றிற்கும் காரணம் சொல்லுவாள்.
நண்பர்கள் நச்சரிப்பு தாங்க முடியாது ஒரு நாள் ஈசன் கங்காவை ஒரு முத்தம் கேட்பதென முடிவுடன் சிறிது கோவத்துடன் போனான். கங்காவை கண்டால் எங்கு கோவம் வாறது? ஒருவாறு வளைஞ்சு நெளிஞ்சு காரியத்திற்கு வந்தான். "ஏன் கங்கா இன்னும் ஐந்து மாசத்தில நான் உனக்கு யார்? " என்று ஆரம்பிச்சான். "ஐந்து மாசத்திற்கு பிறகு தெரிஞ்சிடும் தானேடா ஏன் அவசரப்படுறாய்?" என்றாள். "இல்லை நீ எனக்கு மனைவியா வரப்போறவள் ஏன் இப்ப எனக்கொரு முத்தம் தரக்கூடாது?" என்றான். அவளிடமிருந்து கிடைத்தது மெளனம் மட்டுமே.  "என்ன நீ எல்லாரும் காதலர்களாய் இருக்கும் போது என்ன என்னவெல்லாம் செய்வாங்கள் நான் மட்டும் தான் ஒரு முத்தம் கூட இல்லாமல் இதுவரை இருக்கிறன்". என்று சற்று கோவிச்சான். இந்த கோவம் அவளை ஒன்றும் செய்யாது என்று அவனிற்கு தெரியும்.
ஏன்டா உனக்கு என்னாச்சு? இங்க பார் ஈசன் நீ எனக்கு நண்பனாய் காதலனாய் நாளைக்கு கணவனாய் வரப்போறவன் இதில எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒன்றைத்தெரிஞ்சு கொள், முத்தம் கொடுக்கிறதும் கட்டிப்பிடிக்கிறதும் கைகோத்து நடக்கிறதும் பார்க் பீச் தியேட்டர் என்று சுத்துறதும் தான் காதலா? இப்ப முத்தம் கேக்க தோன்றும் பிறகு..? இதுக்கு பேர் காதல் இல்லை ஈசன், காதல் என்கிற பேரில இளசுகள் செய்கிற லீலை. இப்படி திரிகிறவையில எத்தனை பேர் கணவன் மனைவியாய் ஆகியிருக்கினம். நம்ம கலாச்சாரத்தையும் சீரழிச்சு, நம்ம பெற்றோர்கள் மானம் மரியாதையையும் குழி தோண்டிப்புதைத்து. நாலு பேருக்கு காதலர்கள் என்று காட்டிறதில எல்லாம் எனக்கு ஈடுபாடில்லை. இப்ப நாங்கள் இப்படி கண்மூடி திரிஞ்சிட்டு நாளைக்கு வாற சந்ததியை எப்படி திருத்த முடியும். நமக்கு கீழை இருக்கிறவர்கள் நாளைக்கு எங்களை பின்பற்றக்கூடிய மாதிரி நாங்கள் நடக்க வேணும். இது என் கொள்கை, உனக்கு நான் எனக்கு நீ என்று ஆச்சு. உன் மனசில சுத்தமாய் காதல் தான் இருக்கு என்றால் எனக்காய் காத்திரு. அப்படி இல்லை என்றால் உனக்கு ஏற்றாற் போல ஒரு காதலை தேடிக்கொள்ளலாம், இன்னொரு வழியிருக்கு வேணும் என்றால் சொல்லு நம்ம பெற்றோருக்க சொல்லி அடுத்த கிழமையே நம்ம கலியாணத்தை வைச்சுக்கலாம் எப்படி வசதி" என்று கூறி முடிச்சாள்.
அன்று அவளை ஒரு தமிழ் பெண்ணாய், சிறந்த ஒரு காதலியாய் பார்த்தான். ஐந்து மாசம் ஓடிப்போனது. இன்று கலியாணமும் முடிந்துவிட்டது. இன்று அவர்கள் இருவரும் கணவன் மணைவியாய் இல்லறத்தில் நுழைந்தனர். அவள் இல்லறத்தில் அவனுக்கு ஒளிகொடுக்கும் விளக்காய் நல்ல துணைவியாய். அவன் அன்று கேட்டதும் இன்று கேட்காததும் கேட்காமலே அவனிற்கு கிடைத்தது. அவன் தாரமாய் அவள் அவனுடன். இன்று அவன் இதயத்தில் மட்டும் அல்ல இல்லறத்தினுள்ளும் அவள் தான் விளக்காய்.......!
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110641469690597993?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110641469690597993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110641469690597993' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110641469690597993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110641469690597993'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_22.html' title='தாரமானபின் (சிறுகதை)'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110624739880445700</id><published>2005-01-20T06:55:00.000-12:00</published><updated>2005-01-20T06:56:38.803-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>'றோவும்" தமிழரின் உரிமைப்போரும் -நீலன்</title><content type='html'>அண்டத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒருசில நவீன புலனாய்வு அமைப்புகளினுள் 'றோ"வும் (Research and Analyse Wing -RAW) ஒன்றாகத் திகழ்கின்றது.
தெற்காசியப் பிராந்தியத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களுக்காக இந்திய அரசு 1968 இல் 'றோ" அமைப்பை நிறுவியது.
இந்த அமைப்பு இந்தியப்பிரதமரின் நேரடிப்பொறுப்பின் கீழ் புதுடில்லியில் லோதி வீதியிலுள்ள 13 மாடிக்கட்டடத்தை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது.
இந்திய அரசு ஆரம்ப காலங்களில் 'றோ" விற்கென இரண்டு கோடி (இந்தியப் பணம்) நிதியை பாதீட்டில் ஒதுக்கியது. இன்று ஜயாயிரம் கோடி ரூபாய்களாக பாதீட்டுத்தொகை விரிவடைந்து, ஒரு பலமான நவீன உளவறியும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
தெற்காசியாவைப் பொறுத்தவரையில். சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஸ்தரிப்பு அல்லது பிராந்திய ஆதிக்க முனைப்புக்கள், இந்தியாவின் கேந்திர, பொருளாதார நலன்களை ஸ்திரப்படுத்துவதற்கும், விஸ்தரிப்பதற்கும் பிரதான முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது.
இந்தியாவினது பிராந்தியப் பாதுகாப்பும், அயலுறவுக் கொள்கையும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. இவைகள் இரண்டும் இணை கோடுகளாக செல்லக்கூடியதாக இருக்கின்றதனால் இவ் விடயங்களில் 'றோ" முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது.
'றோ" சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் கண்காணித்தும், இந்திய நலனுக்கு ஏற்ப அயல் நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி ஆட்டம் காணச்செய்தும் வருகின்றது.
அயல் நாடுகளிலுள்ள இனச்சிக்கலின் ஊடாக அரசியல், இராணுவ, பொருளாதாரத் தளங்களில் சேதாரங்களை உண்டுபண்ணியும், சனநாயகத்திற்கான போராட்டங்கள் மூலம் அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் பின்கதவுக் காரியங்களை 'றோ' செய்தும் வருகின்றது.
இந்திய பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தை (கிழக்கு பாகிஸ்தான்) பிரித்தெடுப்பதற்கு வங்களாதேச விடுதலை வீரர்களாக முக்தி பாகினிக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கியது. 'றோ" வினது உளவுச்சேவைச் சரித்திரத்திலேயே பாகிஸ்தானை வெற்றி கொண்ட மறைமுக நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
பாகிஸ்தான் ஒரு தனியான, பலமான தேச அரசுப் பண்பை கொண்டிருந்தது. அது 'றோ"வின் புலனாய்வுத் தந்திரோபாயப் பண்பினால் பாகிஸ்தான், வங்களாதேசம் என இரு நாடுகளாக 1971 இல் பிரிந்தன.
இந்த புலனாய்வு செயற்பாடுகளுக்குப் பின்னரும் இவ்விரு நாடுகளில் இத்தகைய மறைமுக வேலைகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவி விடவில்லை. அது தனக்குச் சார்பான உளவு வட்டத்துக்குள் நுழைவதற்காக வங்காள தேசத்திலுள்ள மதச் சார்பற்றவர்களுக்கும், இந்து சிறுபான்மையினருக்கும் மறைமுக ஆதரவுகளை வழங்கி இருகின்றது.
'றோ" கழுகுக்கண் கொண்டு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானிலுள்ள சின்ட், புன்சாப் பிரிவினரிடையேயுள்ள பல்வேறு இனக்குழுக்கள் கருத்து முரண்பாடுடையவர்கள் மத்தியில் விரிவான உளவு வலையமைப்பை அமைத்துள்ளது.
இதனைவிடவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க திறமையான இந்து உறுப்பினர்களை ஆர்.எல்.எஸ் மூலம் ஆள் திரட்டல்களைச் செய்து அவர்களுக்கு உளவுப் பயிற்சிகளை வழங்கிக் களத்தில் இறக்கியுள்ளது.
உலகில் வல்லரசுகளின் பல்போட்டியில் சமநிலையேற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படும் உளவுச் செயல்கள் உளவு வரலாற்று ஏடுகளில் தனித்துவம் வாய்ந்ததாகும்.
இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளின் கைகள் இலங்கைக்குள் உள்நுழைய தொடங்கியதும் இந்தியா இலங்கையை தனது செல்வாக்கினுள் கொண்டுவருவதற்காக ஏனைய வல்லரசுகளைப்போல் தமிழர் தேசிய இனச்சிக்கலை கையாளத்தொடங்கியது.
இந்தத் தந்திரோபாயப் பண்பு அடிப்படைக் கொள்கையின் அத்திவாரத்தில் இருந்து கொண்டு 'றோ" தமிழ் இளைஞர்களின் தீவிரவேட்கை உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டது. அது உயர்பாதுகாப்பு நிலையங்களான புதுடில்லியிலுள்ள சக்ராட்டாவிலும், மையங்களை உருவாக்கி 'ஜந்து" தமிழ் குழுக்களுக்கு பயிற்சிகளை வழங்கியது.
தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் நெருக்கடியை நல்லிணக்கப் போக்குடன் மாத்திரம் அணுகவேண்டிய நியாயம் அல்லது தேவை இருந்தபோதும் 'றோ" இந்திய நலன்களுக்கான உணர்வுகளுடன் அந்த நெருக்கடியை அணுகத்தலைப்பட்டது. இதுவே எல்லாக் குழப்பத்துக்கும் அடிப்படையாக அமைந்தது.
தமிழரின் இனச் சிக்கலை சரிவரப் புரிந்துகொள்ளாமல், தொலை நோக்குப் பார்வையெல்லாம் இல்லாம் 'றோ" உயர் குழாமினரின் விருந்து உபசார மேசையில் கதைக்கப்படும் விடயங்களை மட்டுமே ஆய்விற்கு எடுத்துத் திட்டங்களை வகுத்து வருகின்றது.
இந்தக் குறுகிய வெளிப்பாட்டில் ஏற்பட்ட ஒருவகைப் பண்பு மாற்றமாகத்தான் 'றோ" புலிகள் இயக்கத்திலிருந்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் முன் நோக்கிய வீறு நடையைத் தடுத்து நிறுத்துவதற்கு தன்னாலான சகலதையும் செய்தது. ஆனாலும் புலிகள் பலம்பெற்றனர்.
தமிழரின் படையான புலிப்படை பலமாகியபோதே சிங்கள ஆளும் உயர்பீடம் நிலை குலைந்துபோய் இந்திய அரசின் காலடியில் சென்றுவிழுந்தது. புலிகளின் பலத்தால்தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ய வழி வகுத்தது.
இந்த யதார்த்த அரசியல் களநிலைவரங்களை பகுத்துணரும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளின் தொடர்ச்சியான போராட்ட வரலாற்று நீட்சி காரணமாக உள்ள தமிழரின் அங்கீகாரத்தை ஏற்றுக்கொள்ள பின்நிற்பது அல்லது தயங்குவதே கவலையானது.
தமிழர் ஒவ்வொரு வீடுகளிலும் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோய் போன்றவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திராகாந்தி இறந்ததும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தனது தாயை இழந்தது போலவே சோகத்தினுள் மூழ்கியிருந்தார்கள். இப்படியான தமிழர்களின் நல்லிணக்க உறவு போக்குகளை புரிந்துகொள்ளாது தமிழர்களுக்கு 'றோ" உயர் பீடமும், இந்தியக்கொள்கை வகுக்கும் உயர்பீடமும், இந்திய அரச உயர்பீடமும், துன்பதுயரங்களை கொடுத்து.
சிங்கள தேசத்தை மாறி, மாறி ஆட்சிசெய்யும் ஆளும் தரப்பினர் எல்லோரும் இந்திய நலனுக்கு விரோதமான அரசியல், இராணுவ, பொருளாதார கொள்கைகளையே கடைப் பிடித்துவந்துள்ளனர். வருகின்றனர். அதாவது நீல நிறக் கட்சிக்காரங்கள், பச்சைநிறக் கட்சிக்காரங்கள், சிவப்பு நிறக் கட்சிக்காரங்கள் என அனைத்தும் இந்தியாவிற்கு சார்பான போக்குகளைக்கொண்டிருக்கவில்லை என்பதை எந்தொரு ஆய்வுகளையும் செய்யாமலே வெளிப்படையாக 'றோ" உயர் பீடத்தினர் தெரிந்துகொள்ளக்கூடிய விடயம்.
87இல் ஜே.ஆர். ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளை இங்கு பார்ப்பதனால் உண்மையொன்று 'றோ'வுக்கு முன்னால் விரிந்து விட்டுச்சென்றுள்ளது.
அதாவது இதுவரை காலமும் புலிகளும், சிங்களப் படையினரும் சண்டை பிடித்த போது இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. இப்போது புலிகளையும், இந்தியாவையும் மோத விட்டு சிங்கள தேசம் மத்தியஸ்தம் வகிப்பதாகவும், சிங்களவர் இரத்தம்  சிந்திக்கொண்டிருந்தார்கள். இப்போதுதான் சிங்களவரைப் பாதுகாத்து இந்தியர்களை இரத்தம் சிந்த வைத்துள்ளேன் என்று சொன்னார். அதற்கு அப்பால் ஜே.ஆர். முன்னால் இந்திய எதிர்ப்புணர்வு மிக்க சிங்களக் கடற்படை தாக்கப்பட்டு உயிர்தப்பிய நிகழ்வு நடந்தது.
இப்படியாக சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்புணர:வு ஆழமாகப் புரையோடி இருக்கும் சிங்கள தேசத்தின் இறைமையின் பாதுகாப்பிற்காக 'றோ" உதவ முன் நிற்பது தமிழரின் வரலாற்று பூர்வமான அரசியல் இறைமையின் பாதுகாப்பை அசட்டை செய்வது தமிழருக்கு கவலை தரும் நிகழ்வாகும்.
'றோ" தமிழரின் உரிமைப் போரை குறைத்து மதிப்பிடும் மனங்பாங்கையுள்ள முகவர் வட்டத்தினரால் வழங்கப்படும் தகவல்களையும் தமிழரின் உரிமை பற்றி சிங்கள உயர் குழாம் வட்டத்தினரால் திணிக்கப்படும் தகவல்களையும் மிள்பரிசீலனை செய்து தமிழர் தொடர்பான கொள்கை மீளுருவாக்கம் செய்யப்படும்போதே இந்திய அரசு நடுநிலை வகிக்க முடியும்.
'றோ'வின் வான் பறப்பியல் ஆய்வு மையம் (Aviation Research Center -ARC) சுறு சுறுப்பாக இயங்குகின்றது. கப்பல்களை கண் காணிக்க 'றோ" அமைப்பின் 2ஆவது பிரிவினர் ஓரிசாவில் டொனியர் (Donier) கடல் கண்காணிப்பு விமானத்தை உபயோகிக்கின்றது. தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் புலனாய்வுத் தகவல்களை வழங்கும் இணைப்பு நிலையமொன்றை நிறுவி, இணையம் (Internet) மின்னஞ்சல் (E-mail) செய்மதி வழித் தொலைபேசி (Inmarsat) வழித் தகவல்களை கண்காணித்தும் வருகின்றது.
இதுபோன்ற நவீனத்துவ வசதிகளைத் தாங்கிய பலம்மிக்க 'றோ" இந்தியாவினுள் உளவுவேலை செய்யப்படும் எந்தொரு சதுரங்க ஆட்ட நகர்தலையும் முறியடித்து வந்த போதிலும் சிங்கள தேசத்தில் ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களை தடுக்க எவ்வளவோ முயன்றும் 'றோ"வினால் வெற்றிபெறமுடியவில்லை.
சிங்கள தேசம் இந்தியாவோடு இணைந்து நடித்த நாடகத்தின் திரை உயர்த்தி, தனது உண்மை ரூபத்தை வெளிப்படுத்தியபோதிலும் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் சிங்கள இறைமைக்கு, குந்தகம் விளைவிக்கும் எந்தொரு தமிழர் சார்புநிலை அரசியல் பணிகளை இந்தியா செய்யாது என்கிற அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நடுநிலை, வகிக்கும் கண்ணோட்டத்தோடு தமிழரின் உரிமைப்போரை அணுகும் அரசியல்பண்போடு தங்களை அர்ப்பணிக்கவேண்டும். அதனை விடுத்து சிங்கள உயர் குழாமோடு ஒட்டி உறவாடித் தகவல்களைப் பெறும் நிரூபமா, நாராயணன், முனி போன்ற 'றோ" உயர்மட்டத்தினரின் ஆலோசனை கேட்கும் பட்சத்தில் இந்திய அரசை மீண்டும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே முடியும்.
மத்திய கிழக்கு நாடுகளினுள் இஸ்ரேல் தேசம் பலமாக இருப்பதனாலே அமெரிக்கா நலனுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படைக்கொள்கையில் அமெரிக்கா இஸ்ரேலை அங்கீகரித்து அத்தேசத்தை பலமாக்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பாடத்தை இந்திய வகுப்பாளர்கள் கற்றுக்கொண்டிருந்தபோதிலும் தமிழர் தாயகம் விடயத்தில் 'றோ"வினது தவறான அணுகு முறைப்போக்கை மாற்றியமைக்காது இருப்பது அறிவுபூர்வமான அரசியல் பண்பிலிருந்து விலகி நிற்பதாக அமைகின்றது.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தாக்கம் தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சோகமான சூழலில் சிங்களதேசமும், ஆதிக்க சக்திகளும் பூகம்ப அரசிலையப் பயன்படுத்தி தங்களது இராணுவ நலன்களையே முதன்மையாக வேணி வருகின்றது.
சிங்கள தேசம் இந்தியாவினது இறைமையைப் பற்றி சிறிதும் சிந்திக்காது இந்திய நலனுக்கு பாதகமான நிலைப்பாட்டினை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் இன்றைய பூகம்ப அரசியல்  சூழலை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழரின் உரிமைப் போரை பலவீனப்படுத்தும் மறைமுக பணிகளிலிருந்து 'றோ" தனது கைகளைக் கழுவிவிட வேண்டிய நிலை ஒன்று உதயமாகியுள்ளது.
தமிழர் உரிமைப் போராட்டம் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் சென்றுவிட்ட அரசியற் சூழ்நிலையிலும், தமிழர் எந்தொரு தீர்வை எட்டாத போதிலும் தமிழர்படை பலமாகவே உள்ளது. இந்தப் பலத்தை பலவீனமாகும். 'றோ"வின் உளவுச் செயற்பாடுகளால் தென்னிந்திய பிராந்திய பாதுகாப்பிற்கு  எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை. அது தர்மமாகவும் இருக்கப்போவதும் இல்லை.
ஆகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொண்டும் தமிழரின் உரிமைப்போரின் நியாயத்தை புரிந்துகொண்டும், தமிழரின் துன்ப துயரங்களை மனிதாபிமானமாக அணுகியும் செயலாற்றக்கூடிய கொள்கைக்கு அத்திவாரம் இடவேண்டும். இதுவே தமிழர் தாயக விடயத்தில் இந்தியாவை நடுநிலைப்படுத்தும்.

[ஈழநாதம்.]

&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110624739880445700?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110624739880445700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110624739880445700' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110624739880445700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110624739880445700'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_20.html' title='&apos;றோவும்&quot; தமிழரின் உரிமைப்போரும் -நீலன்'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110616478972007684</id><published>2005-01-19T07:25:00.000-12:00</published><updated>2005-01-19T07:59:49.720-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>பலவீனமான இந்தியாவின் இராசதந்திரம் - கே.ரி.கே.</title><content type='html'> &lt;img src="http://sooriyan.com/images/stories//In-Sl%20logo.jpg" /&gt;
சுனாமியின் தாக்கம் ஓயமுன்பு சுனாமியின் அரசியல் தாக்கத்தொடங்கிவிட்டது. இலங்கை மக்களின் துயரத்திலும் குளிர்காய முயலும் சர்வதேச, பிராந்திய சக்திகளின் அரசியல் போட்டியையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவின் கடற்படைக்கப்பல் வருகைக்கு இந்தியா சீற்றம் அடைந்திருப்பதென்பதே கவனிக்கவேண்டிய முக்கிய அரசியலாகும். இதில் பல பக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பலவீனமான இராஜதந்திரத்தையே இப்பகுதியில் பரசீலிப்போம்.
இலங்கையின் அரசியல் தலைமையையும் ஆட்சியையும் பாதுகாக்கும் பிரயத்தனத்துடன் இந்தியா பல தடவை முயன்றுள்ளது. எல்லாத்தடவையும் இந்தியாவின் தந்திரம் தோற்றேபோனது. ஒருதடவையாவது இந்தியா வென்றதென்று கூறமுடியாது. மாறாக இலங்கையும்.
இலங்கையின் ஆட்சித் தலைமையுமே வெற்றிபெற்றது. இதனால் இந்தியாவைவிட இலங்கையின் இராஜதந்திரிகள் வென்றவர்கள் என்று அர்த்தமற்றது. மாறா இந்தியாவின் பலவீனத்தை இந்தியாவுக்கு விரோதமான சக்திகள் இலங்கையை வைத்து பலமடைந்ததுடன் இலங்கையை துருப்பு சீட்டாக பயன்படுத்தி இலங்கைக்கான வெற்றியை தமக்குரிய வெற்றியாகவும் மாற்றியுள்ளனர்.
இதில் இலங்கையும் வென்றுள்ளதுடன் இலங்கையின் பக்கமிருந்த சர்வதேச சக்திகளும் வெற்றியடைந்துள்ளன. இதில் குறிப்பிடவேண்டிய பிரதான சக்தியாக தொழிற்பட்ட இந்திய இராஜதந்திரிகளையும் அதன் ஆலோசகர்களையும் நினைவு கொள்ளுதல் வேண்டும். அதிலும் ஜே.என்.டிக்சித் மிக முக்கியமானவர். இப்பந்தி எழுதும்போது டிச்சித் மாரடைப்பால் இறந்ததாகச் செய்திவந்துள்ளன. தனது இராஜதந்திரத்தின் தோல்வியை கணக்குப் போட்டபோதுதான் மாரடைப்பு ஏற்பட்டதோ தெரியாது. அவ்வாறு கருத வாய்ப்புண்டு.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா வெங்கடேஸ்வரனின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு டிக்சித்தின் ஆலோசனைகளை முன்னிறுத்தி செயல்பட்டது. அதன் பிரதான விளைவை இந்தியா அனுபவித்த பின்பும் தனது தந்திரத்திலோ, கொள்கையிலோ மாற்றம் செய்யவில்லை. மாறாக அதேவகையான கொள்கையை இலங்கை விடத்தில் கையாண்டு இறுதியில் தற்போதைய நிலைக்குள் தத்தளிக்கின்றது. இந்தியா இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்த மறு சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலம் இந்தியாவை இலங்கை அரசியல் தலைமைகள் ஏமாற்றியே உள்ளன. இதனை சற்று விரிவாகவும் ஆழமாகவும் பார்ப்போம்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் ஆட்சிக்குவந்த பல இலங்கை அரசாங்கத்தின் தலைமைகள் புவிசார்-அரசியலை மீறும் வகையில் கணிசமான கொள்கை வகுப்புக்களை வரைந்தனர். குறிப்பாக டி.எஸ்.சேனநாயக்கா, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்க, ரணில்விக்கிரமசிங்க, வரிசையில் சந்திரிகா குமாரதுங்கவும் செயற்பட ஆரம்பித்துவிட்டார். இந்தியாவுக்கு விசுவாசம்போல் காட்டிக்கொண்டு மேற்குலத்தை ஆதரிப்பதை தமது கொள்கையாக பின்பற்றியவர்களே மேற்குறிப்பிட்ட அரசியல் தலைமைகளின் போக்காக இருந்தது. ஆனால், இந்திய அரசியல் தலைமைகளோ அவ்வப்போது இலங்கையின் அரசியல் தலைமைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் தமக்கு ஏற்பட்டதுபோல் கருதி செயற்பட்டு சிங்கள தலைமைகளை பாதுகாத்துள்ளனர். குறிப்பாக 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் எழுச்சியை அடக்க தனது இராணுவத்தை நேரடியாக இந்திய அரசியல் தலைமை ஈடுபடுத்தியது. அவ்வாறு இந்தியத்தலைமையின் ஒத்துழைப்போ அனுசரனையோ கிடைக்காத நிலை ஜே.வி.பியின் ஆதிக்கத்தை 1970 களிலேயே சாத்தியப்படுத்தியிருக்கும். அதனை தடுத்து நிறுத்திய இந்திய அரசியல் தலைமைக்கும் இராஜதந்திரத்திற்கும் இலங்கை அதே காலப்பகுதியில் ஏற்பட்ட வங்களாதேஷ் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் பங்களாதேஷை அங்கீகரிக்க பலவருடங்கள் பிற்போட்டிருந்தது. ஒருவகையில் இந்தியாவின் முதுகில் இலங்கை குத்தியது. அப்போது முறுகலும் மிரட்டலும் நடந்ததேயன்றி பெரும் முரண்பாடு வெடிக்கவில்லை. மறுகணம் கச்சதீவு விவகாரத்தை இந்தியா இலங்கைக்குச் சார்பாக மாற்றியது. ஆனால், இலங்கை அப்போது சீனாவுடனும், அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியதாகவும் குறிப்பாக நிக்சனைச சந்தித்து இந்தியாவிடமிருந்து இலங்கையைப் பாதுகாக்குமாறு சிறிமாவோ கேட்டதாகவும் தகவல் உண்டு. அப்போது ஏழாவது கடற்படை அட்மிரலுக்கு சிறிமாவோ இராப்போசன விருந்தளித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இவ்வாறே 1987 களில் ஜே.ஆர.ஜெயவர்த்தனா வடக்கில் புலிகளின் தாக்குதலாலும், தெற்கில் ஜே.வி.பியின் தாக்குதலாலும் ஆபத்தான நிலையை அடைந்திருந்தபோது இலங்கை-இந்திய உடன்படிக்கை என்பதன் மூலம் வடக்கில் இந்திய இராணுவத்தை குவித்ததுடன் தெற்குப்பக்கம் எழுச்சியடைந்த ஜே.வி.பியை கட்டுப்படுத்த ஜே.ஆருக்கு உதவியது. ஆனால், அதனை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்திவிட்டு பாதுகாப்புக் கண்டங்களை எல்லாம் தாண்டிவிட்டது. இந்தியாவை துரத்திவிட்டார்கள். இதில் ஜே.ஆரைவிடவும் பிறேமதாச ஒருபடி மேற்சென்று இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற உதவினார். அதாவது இலங்கை ஆட்சியாளர்கள் இந்தியாவை பயன்படுத்தி வீசினார்கள். அதேவரிசையிலேயே சந்திரிகா குமரதுங்காவும் செயல்பட்டுவருகிறார்.
இந்தியாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவர் இப்போது இந்தியாவை வீசிவிட்டு மேற்குலகின் உதவியையும் ஒத்துழைப்பையும் நம்பி செயற்பட்டு வருகிறார்.
இது காலம் காலமாக இந்திய இராஜதந்திரிகளும், கொள்கைவகுப்பாளர்களும் ஏற்படுத்திக்கொண்ட உபாயங்களின் பலவீனங்களாகவே இனங்காணமுடியும். ஒரு காலத்தில் எந்த நெருக்கடியிலும் சிங்களத் தலைமைகளுக்கு முண்டு கொடுத்த இந்திய தலைமைகள் பின்னொருகாலத்தில் இலங்கை சிங்களத்தலைமைகளுக்காக இலங்கைத்தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் தயாரானார்.
நிரந்தரமான எதிரி யார்? நண்பன் யார்? என்பதை இனமதமொழி கலாசார கூறுகளுக்கூடாக இனங்காணமுடியாத இந்திய தலைமைகள் தமிழர்களை சிங்கள ஆட்சியாளரின் நலன்களுக்காக காட்டிக்கொடுக்கத் தொடங்கியது. அதில் அதிக பங்கெடுத்துக்கொண்டவராக இந்திராகாந்தி காணப்பட்டாலும் அதன் அமுலாக்கத்தை ராஜீவ்காந்தியே ஏற்படுத்திக் காட்டினார். இதன் விளைவை நேரு குடும்பம் மட்டுமல்ல இந்தியத்தேசமே அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியா தென் இலங்கையின் ஆட்சிக்காக தமிழர்களை பயன்படுத்தத் திட்டமிட்டது. அது நெருக்கடி தீவிரமாக வளர்ந்த போதே இந்தியா எதிர் கொண்டது. அதுவரை மிதவாத அரசியல் தலைமைகளை முன்நிறுத்தி தனது இலக்கை அடைந்ததுடன் தமிழர்களை சிங்களவர்கள் அழித்தபோது கூட அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. குறிப்பாக எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது இந்திய சார்பும் நேருவுடனான நெருக்கமும் தமிழர் மீதான ஆக்கிரமிப்பை சாத்தியப்படுத்தியது. இந்திய தலைமை அப்போதெல்லாம் மௌனமாகி, துதிபாடி, ஒத்திசைந்து பகைக்காது இலங்கைத் தமிழர்களை பகைத்தபோது இந்தியா மௌனம் காத்து பண்டாரநாயக்காவுடன் நட்புறவை பேணியது. இதன் தொடர்ச்சியாகவே இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலங்கள் நீடித்தன.
இலங்கைத் தமிழர்களை அழித்தபோதும், தலைமைகளை சிறைச்சாலைகளில் அடைத்து கொலை செய்தபோதும், இந்தியாவுக்கு விரோதமான சக்திகளோடு கொள்கை வகுப்புக்களை மேற்கொண்டபோதும் மௌனமாகிவிட்ட இந்தியா இப்போது சீற்றமடைந்து என்னபயன்? இந்திய ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகமோசமான பின்னடைவாகவே அமெரிக்காவின் வருகை அமைந்துள்ளது. அமெரிக்கத் துருப்புகள் சில வாரங்களில் வெளியேறினாலும், அல்லது சில மாதங்களில் வெளியேறினாலும் இந்திய இராஜதந்திரத்திற்கு நிரந்தரமான பின்னடைவாகவே இது அமையும். தமிழர்களின் தலைமைகளை அழிக்கவும், தமிழ் மக்களின் உறவுகளை கொலை செய்யவும், தமிழருக்கிடையே பகைமைத் தூண்டவும், முரண்பாட்டை வளர்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வரும் இந்தியாவுக்குக் கிடைத்த மிக மோசமான இராஜதந்திர தோல்வியாகும்.
டிக்சித்தின் மறைவும், அமெரிக்க கடற்படையின் வருகையும் இந்திய இராஜதந்திரத்தின் பலவீனத்தையும், தோல்வியையும் காட்டுகின்றதாகும். டிக்சித் எப்படி இந்திய இராணுவத்தை இலங்கைக்குள் ஊடுருவச்செய்வதில் வெற்றி கண்டாரோ அவ்வளவுக்கு அவரது இராணுவத்தின் மீது அடிவிழும் போது துயரமடைந்திருப்பார். தனது பிழையான கொள்கை வகுப்பால் ஏற்பட்ட தவறை மறைக்க அவர் முயன்றதிலே Assignment Colombo என்பதாகும். அதில் அவர் தனது பிழையை மறைக்க முயன்றதுடன் தனது தோல்வியையும், தனது அஸ்தமனத்தையும் மறை பொருளாகக் காட்டியிருந்தார். எனவே இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாறுதல் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்தியிருக்கும்.
ஈழநாதம்.
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110616478972007684?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110616478972007684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110616478972007684' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110616478972007684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110616478972007684'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_19.html' title='பலவீனமான இந்தியாவின் இராசதந்திரம் - கே.ரி.கே.'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110589563008974098</id><published>2005-01-16T05:10:00.000-12:00</published><updated>2005-01-16T05:13:50.090-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>புலிகளின் இரண்டு விமானங்கள்</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;வன்னியில் புலிகளின் இரண்டு விமானங்களை சிறிலங்கா உளவு விமானம் படம் பிடித்ததாம்!&lt;/strong&gt;&lt;/span&gt;  

விடுதலைப்புலிகள் வன்னயில் முன்னர் அமைத்த விமான ஓடுபாதையை விட இன்னொரு - புதிய - ஓடுபாதையை தற்போது அமைத்துள்ளார்கள் என்றும் அந்த ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் தரித்து நின்றதை விமானப்படையின் ஆளில்லா விமானம் படம்பிடித்துள்ளது என்றும் இராணுவ வட்டாரங்களில் இந்த வாரம் சுனாமி போல ஒரு அதிர்ச்சித்தகவல் தாக்கியிருக்கிறது.    இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது -
கடந்த புதன்கிழமை வன்னிவான் பரப்புக்கு மேலாகப் பறந்த சிறிலங்கா விமானப்படையின் இஸ்ரேல் தயாரிப்பு ஆளில்லா உளவு விமானம் இரணைமடுக்குளத்துக்கு அண்மையில் புலிகள் புதிய விமான ஓடுபாதையை அமைத்துள்ளதை அவதானித்துள்ளதாக வவுனியாவில் உள்ள விமானத்தின் கட்டளை மையம் இனம்கண்டுள்ளது என்றும் -
சரக்கு ஏற்றி இறக்கும் சி-130 விமானமே இந்த ஓடுபாதையில் எந்தப்பிரச்சினையும் இன்றி தரையிறங்கிச் சல்லக்கூடிய வகையில் இந்த விமான ஓடுபாதை வசதியாக அமைக்கப்பட்டடுள்ளது என்றும் - இராணுவத்தினர்க்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த விமான ஓடுபாதையில் ஒருவர் ஓட்டக்கூடிய ஆறு ஆசனங்கள் கொண்ட சிறியரக விமானம் தரித்து நின்றதை உளவு விமானம் படம் பிடித்துள்ளதைக் கண்ட படையினர் அதனை மீண்டும் அடுத்த நாள் வியாழக்கிழமை வன்னிவான் பரப்புக்கு மேலாக பறக்கவிட்டுள்ளனர்.
அப்போது அதே ரகமான ஆனால் உருவத்தில் வேறுபட்ட இன்னொரு விமானமும் அங்கு தரித்து நின்றதை உளவு விமானம் படம்பிடித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
புலிகளிடம் விமானம் உள்ள விவகாரம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதியாகிவிட்டதால் இது குறித்து என்ன நடவடிக்கை என்பது தொடர்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி புரிய சிறிலங்காவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராணுவ வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

[Puthinam]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110589563008974098?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110589563008974098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110589563008974098' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110589563008974098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110589563008974098'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_16.html' title='புலிகளின் இரண்டு விமானங்கள்'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110572995096296003</id><published>2005-01-14T07:05:00.000-12:00</published><updated>2005-01-14T07:12:30.963-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>முதல் தமிழ் குறுஞ்செய்திச் சேவை.   </title><content type='html'>&lt;img src="http://img153.exs.cx/img153/7457/TamilSMS.png" /&gt;

ஒலி 96.8ம் முரசு டாட் காமும் இணைந்து வழங்கும் உலகின் முதல் தமிழ் குறுஞ்செய்திச் சேவை.  
சிங்கபூர்த் தமிழ் வானொலியான ஒலி 96.8ம் மொழி சார்ந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியான முரசு டாட் காமும் இணைந்து உலகின் முதல் தமிழ் குறுஞிசெய்திச் சேவையை பெருமையுடன் அறிமுகம் செய்கின்றன. தைப் பொங்கலை முன்னிட்டு அறிமுகம் காணும் இந்தச் சேவை ஒலி நேயர்கள் தமிழிலேயே குறுஞ்செய்தி எழுதி அனுப்புவதைச் சாத்தியமாக்கும்.
முரசு மென்பொருளை உருவாக்கியவரும் தமிழ் குறுஞ்செய்தி தொழில் நுட்பத்தை சாத்தியமாக்கியவருமான திரு முத்து நெடுமாறன் இவ்வாறு கூறினார்: ?1980களிலிருந்து மொழி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது முரசு டாட் காம். தொழில் நுட்பம் எவ்வளவு மாறினாலும் தங்களது தாய் மொழியிலேயே தகவலைப் பரிமாறிக் கொள்ள அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கம்"
இது வரை picture message எனப்படும் படச் செய்திகளை மட்டுமே தமிழில் அனுப்ப முடிந்தது. னால் இப்போது ங்கிலத்தில் செய்வது போலவே தமிழிலும் குறுஞ்செய்தியை எழுதி அனுப்பலாம். இது உலகின் முதல் முயற்சி.?For More Details: &lt;a href="http://www.Murasu.com/mobile/"&gt;www.Murasu.com/mobile/&lt;/a&gt;

[sooriyan.com]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110572995096296003?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110572995096296003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110572995096296003' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110572995096296003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110572995096296003'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_14.html' title='முதல் தமிழ் குறுஞ்செய்திச் சேவை.   '/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110521204654231145</id><published>2005-01-08T05:37:00.000-12:00</published><updated>2005-01-08T07:25:51.333-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதங்கம்'/><title type='text'>எங்கே செல்கிறது எமது சமுதாயம்..?</title><content type='html'>&lt;p&gt;
இந்த விடயம் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களிற்கு முன்னர் நினைச்சேன். இன்று தான் முடிந்தது. அண்மையில ஒரு TV யில் மின்னல் 2004 என்கிற நிகழ்ச்சி பாக்கக்கிடைத்தது. உங்களில் பலரும் பாத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நிகழ்ச்சியைப்பாத்த பொழுது மிகவும் கவலையாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரது நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியைப்பார்த்த பொழுது நமது சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி தான் எனக்கு தோன்றியது. அந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு சில பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் சினீமா நடிகைகள் கிரன், சிம்ரன் போன்றோர் பாடல் காட்சிகளிற்கு அணியும் உடைக்கு ஏறக்குறைய சமனாய் இருந்தது. [இந்த எண்ணிக்கை அடுத்த நிகழ்ச்சியில் பலதாக மாறக்கூடும்]. அவர்கள் தாயகத்து பெண்கள் என்று நினைக்கிறேன். இந்திய சினிமா கலைஞர்களைப்போல் ஓரளவுக்கு நடனம் ஆடினார்கள். ஆனால் அவர்களது உடைகள் நமது சமுதாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றியது. &lt;/p&gt;&lt;p&gt;சினிமாவில கூட ஆண்கள் அதாவது கீரோக்கள் சாதாரணமாக ஆடை அணிவார்கள், பாடல்காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் கீரோயின்கள் தான் மிக மோசமாக ஆடை அணிவார்கள். அதுவும் சமீபகாலமாய் வருகிற படங்களில் மிக மோசமாய் இருக்கும். இது கூட பெண்களை இன்னும் போகப்பொருளாய் தான் சினிமா சமூகம் பார்க்கிறது என்கிறது புரிகிறது. இந்த தாக்கம் நமது சமூகத்திடம் நன்றாக தெரிகிறது. &lt;/p&gt;&lt;p&gt;செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுக்க தயங்கிறியே என்று பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். சேலை வேண்டாம் சுடிதார் வேண்டாம். குறைந்த பட்சம் எமது கலாச்சாரத்தை காப்பாற்றுகிற அளவில ஏனும் ஆடை அணியக்கூடாதா? சினிமாவில கூட அதிக கவர்ச்சியாக தமிழ் பெண்கள் நடிப்பது குறைவு என்று தான் கூற வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;இந்திய சினிமா தமிழை தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்கிற கருத்து தற்பொழுது பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மையாகிறது என்பது இப்படி பட்ட TV நிகழ்ச்சிகளில் நமது சந்ததியினர் பாடல் காட்சிகளிற்கு படங்களில் வருவது போன்று ஆடை அணிய நினைக்கும் போது புலனாகிறது. நமது தமிழ் சமூகம் உடை நடையில கட்டுப்பாட்டுடன் இருந்ததனால் தான் எயிட்ஸ் நமக்கு சற்று எட்ட நிக்கிறது என்பது என்னவோ உண்மை தான். அதற்காக எயிட்ஸ்க்கும் நமக்கும் தொடர்பே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறது ஆனால் அரிதாக இருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;உணர்ச்சிகளிற்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன். நடை உடை பாவனை போன்றவை உணர்ச்சிகளை கிளப்பி விடக்கூடியவாறு அமைகிற நிலையில். பல சமூகப்பிரச்சனைகளை நாம் எதிர் நோக்க வேண்டி வரப்போகிறது. இன்று மேடையில் அரை குறை ஆடையுடன் ஆரம்பம் இதுவே தொடர்கதையாக போனால் நாளை நமக்கு கலாச்சாரம் என்ற ஒன்று இல்லாமலே நாம் போகலாம். பெண்களிற்கு மட்டும் அல்ல ஆண்களிற்கும் தான் ஆடைகளில் அடக்கம் தேவை. ஆனால் ஆண்கள் ஆடை விடயங்களில் மோசமாக நடந்து கொள்வது குறைவு. மேலை நாடுகளில் வாழ்கின்ற எமது இளைய சமூகத்தினர் இதனை பெரிதாக எடுக்காவிடினும். பெற்றோர்கள் கூட இதனை அப்படியே கண்டுக்காமல் கண்டிக்காமல் விடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. வளர்ந்து வருகின்ற சமுதாயம் இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் நமது சந்ததிகள் பல பிரச்சனைகளை தாங்கியவாறு இந்த உலகத்தில் பிறக்க வேண்டி வரலாம். இப்படி பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் எனினும் ஒளிபரப்புவதை தவிர்க்கலாம். இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் எனினும் இப்படி பட்ட விடயங்களை கருத்தில் எடுக்கலாம். இது இன்று சிறிய விடயமாக தெரிந்தாலும் நாளை நாம் சிந்திக்க வேண்டி வரலாம். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110521204654231145?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110521204654231145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110521204654231145' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110521204654231145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110521204654231145'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_08.html' title='எங்கே செல்கிறது எமது சமுதாயம்..?'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110501395679633546</id><published>2005-01-06T00:17:00.000-12:00</published><updated>2005-01-06T00:19:16.796-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி நடவடிக்கைகள் ஒரு தனிநாட்டிற்கான நிர்வாக கட்டமைப்பின் எடுத்துக்காட்டு: வோசிங்டன் ரைம்ஸ் பாராட்டு!!&lt;/span&gt;

ஆழிப்பேரலை தாக்கிய சில நிமிட நேரத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதை வியந்தும்ää பாராட்டியும் ஆதர் மக்ஸ் எனும் ஏ.பி. ஊடக நிறுவன செய்தியாளர் கிளிநொச்;சியில் இருந்து வோசிங்டன் ரைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் போராளிகளின் ஒருபகுதியினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி காயப்பட்டவர்களை உடனுக்குடன் வைத்தியசாலைகளுக்கு விரைவாக அனுப்புவதற்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கää இன்னொரு பகுதியினர் காயம்பட்டவர்களுக்கு தேவையான இரத்ததானம் பெறுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். வேறொரு பகுதியினர்ää இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக உடனுக்குடன் புகைப்படம் எடுத்ததுடன்ää அவர்களை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். இவ் அனர்த்தங்களின் முதல்நாள் அன்றே அகதி முகாம்கள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாக பல குழுக்களையும் விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தனர். விடுதலைப் புலிகளினது மீட்புப் பணி நடவடிக்கைகள்ää அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல்ää இவ்வாறான சிரமமிக்க ஒரு பணியினை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனிநாட்டு கோரிக்கைக்கு முன்னோடியாக ஓர் நிர்வாக கட்டமைப்பு இருப்பதனை உலகிற்கு நிருபித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமன்றிää ஆழிப்பேரலை ஓயும் முன்னரேää கடற்புலிகளின் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதை ஆச்;சரியத்துடன் குறிப்பிட்ட அவர்ää அதேவேளை சிறிலங்கா அரசின் பரிதாப நிலையையும் மிகவும் துல்லியமாக விவரிக்கத் தவறவில்லை. மீட்புப் பணிகள் ஆரம்பிக்க முன்னரேää இப் பணிகளை யார் முன்னின்று செயற்படுத்துவது என்பதில் சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு இடையில் முரன்பாடுகள் ஏற்பட்டது மட்டுமன்றிää மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே ஊழல் குற்றச்;சாட்டுகளும்ää நிவாரணப் பொருட்களுடன் வந்த வாகனங்கள் கடத்தப்பட்ட சம்பவங்களும் செய்திகளாக வெளிவரத் தொடங்கியிருந்தன. இதேபோன்றுää இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையும் விடுதலைப் புலிகளினதும்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் நிர்வாகத் திறமையினை பாராட்டியும் சிறிலங்கா அரசின் நிவாரணப்பணிகள் மிகவும் கட்டுக்கோப்பற்ற முறையில் கையாளப்பட்டும் வருவதாக கண்டனம் தெரிவித்தும் கடந்த 5ம் திகதி தனது ஆசரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 [புதினம்.கொம்]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110501395679633546?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110501395679633546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110501395679633546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110501395679633546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110501395679633546'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_06.html' title='தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110484307031312839</id><published>2005-01-04T00:47:00.000-12:00</published><updated>2005-01-04T00:51:10.313-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><title type='text'>கேந்திர இராணுவ போட்டி களமாகும் இலங்கை...? </title><content type='html'>சுனாமியின் தாக்கம் இந்நாட்டின் இனப்பிரச்சினையையும் சமாதான முயற்சிகளையும் இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டுள்ள அதே வேளையில் கேந்திர ரீதியாக அக்கறையுள்ள சில நிகழ்வுகள் அனர்த்தத்தின் மறைவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை கவனிக்காமலிருக்க முடியவில்லை. இலங்கையில் நடைபெற்றுள்ள அனர்த்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தமது கேந்திர நோக்கங்களை அடைவதற்கு சக்திவாய்ந்த நாடுகள் சில மேற்கொண்டுவரும் முயற்சிகள் பிராந்திய இராணுவச் சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

தன்னுடைய கேந்திர நலன்களின் அடிப்படையில் இலங்கை மீது அமெரிக்கா நீண்ட காலமாகவே ஹகண்' வைத்திருந்தது. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் நெருக்கடிகளின் மத்தியில் - இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கு வாய்ப்பான தளம் ஒன்றை அமெரிக்கா நீண்ட காலமாகத் தேடி வந்துள்ளது. அந்த வகையில் இலங்கை தான் அமெரிக்காவின் விருப்புக்குரிய இடமாக இருந்து வந்திருக்கின்றது. இருந்த போதிலும் இதற்கு நீண்டகாலமாகத் தடைபோட்டு வந்திருப்பது இந்தியா தான்! உபகண்டப் பிராந்தியத்தில் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாகவே இருந்து வருகிறது. 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை இதனைத் தெளிவாகவே பிரதிபலித்தது? இப்போது கடல்கோளினால் பேரழிவு ஒன்றை நாடு சந்தித்துள்ள நிலையில் - உதவி என்ற பெயரில் பெருந்தொகையான அமெரிக்கத் துருப்புகள் இலங்கைக்குள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்து வந்து சேரவுள்ள சுமார் இரண்டாயிரம் விஷேட படையினரும் இலங்கையின் பல பாகங்களிலும் முகாம்களை அமைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேட யுத்தக் கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் போன்றவற்றுடன் அழிவுற்ற மக்களை மீட்குப் பணி எனக் கூறிக்கொண்டு வருகை தரும் அமெரிக்கப் படைகள் காலி திருகோணமலை கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பிரதான இராணுவத் தளங்களை நிறுவும் எனவும் யாழ்ப்பாணத்துக்கான விஷேட அமெரிக்க படைப் பிரிவு பலாலிக்கு விமானம் மூலமாக அனுப்பப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இவர்கள் நாகர்கோவில் பருத்தித்துறை உட்பட கரையோரப் பகுதிகளில் குழுக்களாகச் செயற்படுவார்கள் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கையைத் தாக்கிய கடற்கோளைப் பொறுத்தவரையில் மீட்புப் பணிகள் அநேகமாகப் பூர்த்தியாகிவிட்டன. அடுத்த கட்டமாக இருப்பது அனைத்தையும் இழந்து அகதிகளானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதும் புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் விஷேட படை அணிகள் இந்த புனர்வாழ்வு நடவடிக்கைகளிலோ அல்லது மீள்குடியேற்ற முயற்சிகளிலோ எந்தளவுக்கு உதவப் போகின்றன!? மீட்பு நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவது தான் வழமை! ஆனால் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் படையினரை அமெரிக்கா அனுப்பிவைப்பது இயல்பாகவே சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுதான்! இந்தச் சந்தேகம் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. அதனால் தான் அமெரிக்காவுக்கு மறைமுகமான அச்சுறுத்தலைக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்தியா உடனடியாக பத்துக்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதுடன் இந்தியக் கடற்படையும் தீவிர தரையிறக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க பிரசன்னத்துக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை இதன் மூலம் இந்தியா தெளிவாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இலங்கை அமெரிக்க செல்வாக்குக்கு அதிகளவில் உட்படுவது தன்னுடைய கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல் என்றே இந்தியா கருதுகின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்க நிலைக்கு இது சவாலாக அமைந்துவிடலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. அமெரிக்காவை விட பாகிஸ்தானின் உதவிகளும் அதிகளவுக்கு வருவது இந்தியாவை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக எனக் கூறி இரண்டு கடற்படைக் கப்பல்களையும் இரு சி- 130 ரக ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களையும் அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கின்றது. தன்னுடைய நடவடிக்கைகள் மனிதாபிமான நோக்கத்தைக் கொண்டவையே என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனைச் சந்தேகக் கண்களுடனேயே இந்தியா பார்க்கும் என்பது வெளிப்படை! சமாதானத்தை முன்னகர்த்த முடியாமல் இக்கட்டான நிலைமையிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்விதம் கேந்திர இராணுவப் போட்டியின் ஒரு தளமாக இலங்கையை மாற்றியமைக்க ஏன் முற்பட்டிருக்கின்றார்? கடல்கோளினால் ஏற்பட்ட அனர்த்தம் யுத்தத்துக்கான உடனடிச் சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிட்டது என ஜனாதிபதி சந்திரிகா கடந்த வாரத்தில் கூறியிருந்தார். இந்த அனர்த்தம் படைகளையும் பெரிதாகப் பாதித்துள்ளது என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் வெளிநாட்டுத் துருப்புகளை கேந்திர இடங்களில் முகாமிட அனுமதிப்பதன் மூலம்இ எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைப் பெருமளவுக்குத் தடுக்கக் கூடியதாக இருக்கும் என்ற ஒரு கருத்து சிங்கள இனவாதிகள் மத்தியில் உள்ளதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாடாகத்தான் அமெரிக்க இந்தியத் துருப்புகளுக்கு இப்போது செங்கம்பளம் விரிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றது! அவலங்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் இந்த அணுகுமுறைகள்இ கேந்திர இராணுவப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றப் போகின்றது. குறுகிய கால அரசியல் நலன்களின் அடிப்படையில் இதற்கு அரசாங்கம் பச்சைக் கொடி காட்டுவது நீண்ட கால அடிப்படையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்! இன்றைய நிலையில் அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு எவ்வாறான உதவிகள் தேவையாகவுள்ளன என்பதை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். குறுகிய நலன்களைக் கருதி ஏகாதிபத்திய நாடுகளின் நோக்கங்களுக்கு இரையாகக் கூடாது!

[ நன்றி: தினக்குரல்]
&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110484307031312839?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110484307031312839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110484307031312839' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110484307031312839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110484307031312839'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2005/01/blog-post_04.html' title='கேந்திர இராணுவ போட்டி களமாகும் இலங்கை...? '/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9835118.post-110432220812699733</id><published>2004-12-28T23:26:00.000-12:00</published><updated>2007-02-12T08:29:39.466-12:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதங்கம்'/><title type='text'>தமிழினத்தை ஒரு உயிரினமாய் கூட எண்ணவில்லையா..??</title><content type='html'>நான் இணையத்தில் இணைந்த நேரம் எவ்வளவு சோகமான நேரம் என்று எனக்கு தெரியும். வரலாறு காணாத பேரழிவு தமிழ் மக்களுக்கு நடந்திருக்கிறது இந்த அழிவுகளை எப்படியும் நிவர்த்தி செய்ய முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாய் கட்டடங்கள் கட்டலாம் பொருட்கள் வாங்கலாம். ஆனால் அனாதைகளாய் நிக்கிற எம் மக்களது சொந்தங்களை திருப்பி கொடுக்க யாரால் முடியும். நம்பவம் நடந்த தினத்தில் இருந்து எல்லா மக்களது வீட்டிலும் வேதனை நிறைந்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.

&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பேச்சில் மட்டுமா தமிழர் இலங்கைப்பிரசைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;
&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;
இது இப்படியிருக்க. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள மக்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் எந்த வித நீவாரணப்பணிகளுகம் செய்யப்படவில்லை என்று அறிகையில். இவர்கள் எப்பவும் மனிதர்களாய் வாழ மாட்டார்கள் என்ற எண்ணம் ஆணித்தரமாய் ஆகிறது. வரலாற்றிலேயே இப்படி ஒரு செயல் நடந்திருக்குமா..?? எதிரிக்கே உதவி புரிந்த ஒரு போராட்ட இயக்கம் இருந்திருக்க முடியாது. ஆனால் விடுதலைப்புலிகள் இராணுவத்திற்கே உதவி செய்தார்கள் என்று கூறும் போது தமிழன் என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தேன். ஆனால் சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு செய்தது என்ன. ஒரு அரசு செய்யவேண்டிய குறைந்த பட்ச நிவாரணஉதவி கூட சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும் போகவில்லை என்பது. எத்தனை கவலைக்கிடமானது மட்டும் அல்ல கீழ்த்தரமான விடையம்.
தமிழர் புனர்வாழ்வு களம் கொண்டு சென்ற பொருட்களை கூட சிங்களப்பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டார்கள் என்று அறியும் போது. இவர்கள் தமிழர்களை ஒரு உயிரினமாய் கூட நினைக்கவில்லையா என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

&lt;span style="color:#ff0000;"&gt;தங்கள் குணம் காட்டும் மிருக்கூட்டம்&lt;/span&gt;
அதைவிட இன்னும் ஒரு மனிதாபிமானம் இல்லாத செயல் நடந்தேறிக்கொண்டிருக்கிறதாம். பாதிக்கப்படாத சிங்கள மக்களையும் கிளிந்த ஆடைகள் போட்டும்.. காயம் பட்டது போன்ற கட்டுக்கள் போட்டும் அங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் அவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டி நிவாரண உதவி அவர்களிற்கு வழங்கப்படுகிறதாம். அந்த நிவாரணப்பொருட்களை அவர்கள் விக்கிறார்களாம். இது எப்படிபட்ட ஒரு இரக்கம் இல்லாத சுயநலம் பிடித்த ஒரு சமூகம் உலகத்தில் இருக்கிறது அதுவும் எமக்கு அருகி்ல் இருக்கிறது என்று எண்ணும் போது. அவமானப்படுவது மட்டும் அல்ல ஆத்திரம் கூட வரவைக்கிறது.

&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இழப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;
இந்த விடயம் யாவராலும் எதிர்பார்க்கப்பட்ட விடயம். சிறிலங்கா அரசு இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு இழப்பு வந்ததாய் அறிவித்த பின். எல்லாத்தமிழ் மக்களும் ஆதங்கத்துடன் எண்ணியிருப்பது இயக்க உறுப்பினர்களிற்கு என்ன ஆச்சு அவர்களிற்கும் ஏதாவது இழப்போ என்று எண்ணியிருப்பார்கள். இன்று &lt;strong&gt;விசாலகன் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை பொறுப்பாளர் TTN ல் கொடுத்த பேட்டியில். விடுதலைப்புலிகளிற்கு பெரிய இழப்பு இல்லை என்று கூறினார். அவர்களது தளபாடங்களிற்கும் பெரிய இழப்புகள் இல்லையாம் காரணம் அவர்களது கடலில் பாவிக்கப்படும் தளபாடங்கள் கடலிலும் தரையிலும் ஓட்டப்படும் உபகரணங்களாம் அவற்றை அவர்கள் முடிந்த வரை பாதுகாப்பாக வைப்பது வழக்கமாம் அதனால் அவர்கள் பெரிதாக இழப்பை எதிர் கொள்ளவில்லை என்று கூறினார்.&lt;/strong&gt; அவர்கள் மக்களது இழப்பு தான் தமது இழப்பு என்று கூறுகிறார்கள். அது மன ஆறுதலை தந்தாலும் மக்களது இந்த இழப்பை எப்படி பூர்த்தி செய்வது என்று தான் அவர்களது முழு கவலையும்.

&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தேவைகளை கூறியவர்கள்.. இன்று உயிருடன் இல்லை&lt;/span&gt;&lt;/strong&gt;
நேற்று புனர்வாழ்வு களகப்பொறுப்பாளர் றெஜு அவர்களது பேட்டிபார்க்கையில். மிகவும் நெருடலாய் இருந்தது. அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த நம்பிக்கை ஒளி நிதியத்திற்கு நிதி சேகரிப்பிற்காய் வந்தவர் உயிர்க்காப்பு நிதி சேகரிக்க வேண்டிய தூர்ப்பாக்கிய நிலையில் தள்ளப்பட்டார். அவர் கூறும் போது தன்னிடம் சைக்கிள் வேண்டும்.. வாற வருடனம் புதிய சப்பாத்து வேண்டும்.. வருத்தம் வந்தால் கொண்டு செல்ல புதிய வாகனம் வேணும் என்று எல்லாம் சிறுவர் இல்ல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கேட்க யாவும் வாங்கிக்கொண்டு தான் வருவேன் என்று உறுதி கொடுத்து விட்டு வந்ததாகவும், ஆனால் அதைக்கேட்ட யாரும் இப்பொழுது உயிருடன் இல்லை என்று கூறினார். எத்தனை கொடுமையிது சின்னக்குழந்தைகள் என்ன செய்தன அகதியாய் அனாதையாய் ஆகி சிறுவர் இல்லங்களிலும் முதியோர் இல்லங்களிலும் வாழ்ந்தவர்களது உயிரைப்பறிப்பதில் என்ன இன்பம் ...?? யுத்தத்தால் சிறுக சிறுக இறந்த மக்களைவிட ஒரு சில மணி நேர இயற்கையின் கொடிய தாண்டவத்தால் இறந்தவர்களின் அளவு எத்தனைபேர். இப்படி எல்லாம் தமிழர்க்கு கொடுமை நடக்க நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்...??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9835118-110432220812699733?l=kajazvizi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kajazvizi.blogspot.com/feeds/110432220812699733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9835118&amp;postID=110432220812699733' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110432220812699733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9835118/posts/default/110432220812699733'/><link rel='alternate' type='text/html' href='http://kajazvizi.blogspot.com/2004/12/blog-post.html' title='தமிழினத்தை ஒரு உயிரினமாய் கூட எண்ணவில்லையா..??'/><author><name>கயல்விழி</name><uri>http://www.blogger.com/profile/03326809260378388046</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='12' src='http://img28.exs.cx/img28/8930/eye9mm.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
