Saturday, January 08, 2005

எங்கே செல்கிறது எமது சமுதாயம்..?

இந்த விடயம் பற்றி எழுத வேண்டும் என்று சில நாட்களிற்கு முன்னர் நினைச்சேன். இன்று தான் முடிந்தது. அண்மையில ஒரு TV யில் மின்னல் 2004 என்கிற நிகழ்ச்சி பாக்கக்கிடைத்தது. உங்களில் பலரும் பாத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நிகழ்ச்சியைப்பாத்த பொழுது மிகவும் கவலையாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரது நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியைப்பார்த்த பொழுது நமது சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி தான் எனக்கு தோன்றியது. அந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு சில பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் சினீமா நடிகைகள் கிரன், சிம்ரன் போன்றோர் பாடல் காட்சிகளிற்கு அணியும் உடைக்கு ஏறக்குறைய சமனாய் இருந்தது. [இந்த எண்ணிக்கை அடுத்த நிகழ்ச்சியில் பலதாக மாறக்கூடும்]. அவர்கள் தாயகத்து பெண்கள் என்று நினைக்கிறேன். இந்திய சினிமா கலைஞர்களைப்போல் ஓரளவுக்கு நடனம் ஆடினார்கள். ஆனால் அவர்களது உடைகள் நமது சமுதாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றியது.

சினிமாவில கூட ஆண்கள் அதாவது கீரோக்கள் சாதாரணமாக ஆடை அணிவார்கள், பாடல்காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் கீரோயின்கள் தான் மிக மோசமாக ஆடை அணிவார்கள். அதுவும் சமீபகாலமாய் வருகிற படங்களில் மிக மோசமாய் இருக்கும். இது கூட பெண்களை இன்னும் போகப்பொருளாய் தான் சினிமா சமூகம் பார்க்கிறது என்கிறது புரிகிறது. இந்த தாக்கம் நமது சமூகத்திடம் நன்றாக தெரிகிறது.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுக்க தயங்கிறியே என்று பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். சேலை வேண்டாம் சுடிதார் வேண்டாம். குறைந்த பட்சம் எமது கலாச்சாரத்தை காப்பாற்றுகிற அளவில ஏனும் ஆடை அணியக்கூடாதா? சினிமாவில கூட அதிக கவர்ச்சியாக தமிழ் பெண்கள் நடிப்பது குறைவு என்று தான் கூற வேண்டும்.

இந்திய சினிமா தமிழை தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்கிற கருத்து தற்பொழுது பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மையாகிறது என்பது இப்படி பட்ட TV நிகழ்ச்சிகளில் நமது சந்ததியினர் பாடல் காட்சிகளிற்கு படங்களில் வருவது போன்று ஆடை அணிய நினைக்கும் போது புலனாகிறது. நமது தமிழ் சமூகம் உடை நடையில கட்டுப்பாட்டுடன் இருந்ததனால் தான் எயிட்ஸ் நமக்கு சற்று எட்ட நிக்கிறது என்பது என்னவோ உண்மை தான். அதற்காக எயிட்ஸ்க்கும் நமக்கும் தொடர்பே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறது ஆனால் அரிதாக இருக்கிறது.

உணர்ச்சிகளிற்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன். நடை உடை பாவனை போன்றவை உணர்ச்சிகளை கிளப்பி விடக்கூடியவாறு அமைகிற நிலையில். பல சமூகப்பிரச்சனைகளை நாம் எதிர் நோக்க வேண்டி வரப்போகிறது. இன்று மேடையில் அரை குறை ஆடையுடன் ஆரம்பம் இதுவே தொடர்கதையாக போனால் நாளை நமக்கு கலாச்சாரம் என்ற ஒன்று இல்லாமலே நாம் போகலாம். பெண்களிற்கு மட்டும் அல்ல ஆண்களிற்கும் தான் ஆடைகளில் அடக்கம் தேவை. ஆனால் ஆண்கள் ஆடை விடயங்களில் மோசமாக நடந்து கொள்வது குறைவு. மேலை நாடுகளில் வாழ்கின்ற எமது இளைய சமூகத்தினர் இதனை பெரிதாக எடுக்காவிடினும். பெற்றோர்கள் கூட இதனை அப்படியே கண்டுக்காமல் கண்டிக்காமல் விடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. வளர்ந்து வருகின்ற சமுதாயம் இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் நமது சந்ததிகள் பல பிரச்சனைகளை தாங்கியவாறு இந்த உலகத்தில் பிறக்க வேண்டி வரலாம். இப்படி பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் எனினும் ஒளிபரப்புவதை தவிர்க்கலாம். இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் எனினும் இப்படி பட்ட விடயங்களை கருத்தில் எடுக்கலாம். இது இன்று சிறிய விடயமாக தெரிந்தாலும் நாளை நாம் சிந்திக்க வேண்டி வரலாம்.

1 comment:

U.P.Tharsan said...

அருமை! நல்ல விடயங்களை அருமையான எழுத்துநடையிலே கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்.....