Tuesday, February 08, 2005

கௌசல்யன் கொலைக்கு ஐ.நா. கண்டனம்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. ஐ.நா. சபை இன்று விடுத்துள்ள இந்தக்கண்டன அறிக்கையில் கௌசல்யன் படுகொலையைக் கண்டித்திருப்பதுடன் சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் செயலாளர் நாயகம் கோபி அனான் வேண்டுகொள் விடுத்துள்ளார். அமைதியையும் கட்டுப்பாடுகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும்படி கோரியுள்ள அனான்ää படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். --------------------------------------------------------------- [puthinam]

2 comments:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

கயல்விழி ஒரு வேண்டுகோள். இந்த செய்தி வந்த ஊடகத்தின் முகவரியை கொடுத்தால், உங்கள் செய்தியின் நம்பகத் தன்மை அதிகரிக்கும். மற்றும் அது சம்பத்தமான மற்ற தகவல்களையும் அறிய முடியும்

கயல்விழி said...

இனிவரும் செய்திகளுடன் கண்டிப்பாக முழுமையாக எடுத்த தளத்தையும் இணைக்கிறேன். [puthinam] அப்படி என்று போட்டேன். இனி www.puthinam.com என்று போடுகிறேன் உங்கள் கருத்திற்கு நன்றிகள் கங்கா.