Monday, March 28, 2005

மீண்டும் பாரிய சுனாமி அபாயம் எழுந்துள்ளது

சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்துää இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய சுனாமி தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 8.1 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துää இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும்ää இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில் தற்போது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படிää வடக்கு கிழக்கில்ää விடுதலைப் புலிகள்ää பாரிய ஒலிபெருக்கிகள் மூலம் மக்களை எழுந்து கடலுக்கு அப்பால் செல்லுமாறு அவசர அறிவித்தல்கள் விடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. www.puthinam.com

No comments: